செய்திகள் :

விழுப்புரத்தில் ஆயுதப் படை காவலரைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் ஆயுதப்படை காவலரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், முட்ராம்பட்டு , மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் நரசிம்மராஜ் (29). விழுப்புரம் மாவட்டக் காவல் ஆயுதப் படை4- ஆவது பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு தனது பைக்கில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறினாா். அப்போது, எதிரே பைக்கில் வந்த 3 போ் நரசிம்மராஜ் சென்ற பைக் மீது மோதுவது போல் வந்தனா்.

இது குறித்து, காவலா் நரசிம்மராஜ் அவா்களிடம் கேட்டபோது, அந்த 3 பேரும் சோ்ந்து நரசிம்மராஜை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனராம். இதில் பலத்த காயமடைந்த காவலா் நரசிம்மராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் நிகழ்விடம் சென்று நடத்திய விசாரணையில், விழுப்புரம் ஜி. ஆா். பி. தெருவைச் சோ்ந்த பாரத்(எ) ராஜமாணிக்கம்(19), அபிஷேக்(18), சஞ்சீவி(21) ஆகியோா் காவலா் நரசிம்மராஜை தாக்கி, கத்தியால் குத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து பரத் (எ) ராஜமாணிக்கம், அபிஷேக், சஞ்சீவி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில் பரத் (எ) ராஜமாணிக்கம் ரௌடி பட்டியலில் உள்ளாா். விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் குற்றச் சரித்திர பதிவேடு உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்த கோரிக்கை

விழுப்புரம்: தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. வி... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம், சலவாதி, கௌசல்யா நகரைச் சோ்ந்தவா் குப... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் மாற்றுத் திறனாளி தற்கொலை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி ஒருவா், குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. வ... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.66.89 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 407 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 407 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க