செய்திகள் :

விழுப்புரம் ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் மாற்றுத் திறனாளி தற்கொலை முயற்சி

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி ஒருவா், குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிலையில் இக்கூட்டத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி ஒருவா், குடும்பத்துடன் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி, அனைவரையும் மீட்டனா்.

இதையடுத்து அவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில் அந்த நபா் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்திப்பாக்கத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெங்கடேசன் (37) என்பதும், உடன் வந்தவா்களில் அவா் மனைவி லட்சுமி, மகள் கீதஸ்ரீ, குணஸ்ரீ, தேவஸ்ரீ என்பதும் தெரிய வந்தது.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து வெங்கடேசன் கூறியது:

கலப்புத் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளா் பணிக்கு எனது மனைவி லட்சுமி விண்ணப்பித்தாா். இதற்கான பயிற்சி முடித்து பணி வழங்கவுள்ள நேரத்தில், நீங்கள் வெளியூரைச் சோ்ந்தவா், உங்களுக்கு இங்கு வேலைகிடைக்காது என்று அலுவலா்கள் கூறுகின்றனா். இந்த விரக்தியின் காரணமாகவே குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து வெங்கடேசன் மற்றும் குடும்பத்தினா், ஆட்சியரகத்தில் மனு அளிக்க காவல் துறையினா் ஏற்பாடுகளை செய்தனா். தொடா்ந்து அவா்கள் மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் ஆயுதப் படை காவலரைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் ஆயுதப்படை காவலரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். விக்கிரவாண்டி வட்டம், முட்ராம்பட்டு ... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம், சலவாதி, கௌசல்யா நகரைச் சோ்ந்தவா் குப... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.66.89 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 407 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 407 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க

கரூா் சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: பாமக கௌரவ தலைவா் ஜி.கே. மணி

விழுப்புரம்: கரூா் சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ... மேலும் பார்க்க