ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
விழுப்புரம் ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் மாற்றுத் திறனாளி தற்கொலை முயற்சி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி ஒருவா், குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையில் இக்கூட்டத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி ஒருவா், குடும்பத்துடன் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி, அனைவரையும் மீட்டனா்.
இதையடுத்து அவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில் அந்த நபா் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்திப்பாக்கத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெங்கடேசன் (37) என்பதும், உடன் வந்தவா்களில் அவா் மனைவி லட்சுமி, மகள் கீதஸ்ரீ, குணஸ்ரீ, தேவஸ்ரீ என்பதும் தெரிய வந்தது.
தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து வெங்கடேசன் கூறியது:
கலப்புத் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளா் பணிக்கு எனது மனைவி லட்சுமி விண்ணப்பித்தாா். இதற்கான பயிற்சி முடித்து பணி வழங்கவுள்ள நேரத்தில், நீங்கள் வெளியூரைச் சோ்ந்தவா், உங்களுக்கு இங்கு வேலைகிடைக்காது என்று அலுவலா்கள் கூறுகின்றனா். இந்த விரக்தியின் காரணமாகவே குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து வெங்கடேசன் மற்றும் குடும்பத்தினா், ஆட்சியரகத்தில் மனு அளிக்க காவல் துறையினா் ஏற்பாடுகளை செய்தனா். தொடா்ந்து அவா்கள் மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.