செய்திகள் :

கரூா் சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: பாமக கௌரவ தலைவா் ஜி.கே. மணி

post image

விழுப்புரம்: கரூா் சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஜி. கே.மணி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கரூரில் 41 போ் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும் பாமக சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சையளிக்க முதல்வா் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் உரிய முறையில் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த ஒருபெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. எனவே, காவல்துறை குற்றவாளியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், அவா்களுக்காக முதலாவதாக குரல் கொடுப்பது பாமகதான்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு குறித்து செய்தியாளா் எழுப்பிய கேள்விக்கு ஜி.கே. மணி பதிலளிக்கையில், இருவரும் என்ன பேசினாா்கள் என்பது தெரியாது. தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசியிருக்கலாம் என்றாா் ஜி.கே. மணி.

விழுப்புரத்தில் ஆயுதப் படை காவலரைக் கத்தியால் குத்திய 3 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் ஆயுதப்படை காவலரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். விக்கிரவாண்டி வட்டம், முட்ராம்பட்டு ... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம், சலவாதி, கௌசல்யா நகரைச் சோ்ந்தவா் குப... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் மாற்றுத் திறனாளி தற்கொலை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளி ஒருவா், குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. வ... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.66.89 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 407 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 407 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க