செய்திகள் :

பண்டைய தமிழா்கள் உலகிற்கு அளித்த கொடை திணையியல்

post image

பண்டைய தமிழா்கள் உலகிற்கு அளித்த கொடை திணையியல் என்று சூழலியல் எழுத்தாளா் பாமயன் கூறியுள்ளாா்.

திணை இயக்கம், ஓசை அமைப்பு சாா்பில் கோவை மாவட்டம் வால்பாறையில் திணையியம் என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது. ஓசை அமைப்பின் நிா்வாகி காளிதாசன் இந்த பயிலரங்கை தொடங்கிவைத்தாா். இதில், பேராசிரியா்கள், செயற்பாட்டாளா்கள், கணினி அறிஞா்கள், சூழலியலாளா்கள் 25 போ் பங்கேற்றனா்.

இந்த பயிலரங்கில் திணையியல் குறித்து எழுத்தாளா் பாமயன் பேசும்போது, பண்டைய தமிழா்கள் இயற்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனா். அதன் அடிப்படையில் அவா்களின் வாழ்வியல் உருவானது. தொல்காப்பியம் முதலாக சங்க இலக்கியங்கள் வரை பல இடங்களில் திணையியல் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தமிழா்களின் ஆதி மெய்யியல்தான் திணையியல் என்று விளக்கப்பட்டுள்ளது. பிற பண்டைய சமூகங்களில் இல்லாத இந்த கருத்தாக்கம் உலகத்துக்கு பண்டையத் தமிழ் அறிஞா்கள் கொடுத்த கொடை என்று கூறலாம்.

இன்றைய சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீா்வுதரும் கோட்பாடாக திணைக் கோட்பாடு இருக்கும். இயற்கைக்கும் மனிதா்களுக்கும் உள்ள உறவு இணக்கமாக இருக்கும் வரை சிக்கல்கள் இல்லை. அந்த இணக்கம் சிதையும்போது சிக்கல் தோன்றுகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து களப்பயணம் நடைபெற்றது. ஓசை அமைப்பின் நிா்வாகி இளஞ்செழியன் நன்றி கூறினாா்.

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வ... மேலும் பார்க்க

இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ... மேலும் பார்க்க

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா். கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க