தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்
அமெரிக்கன் கல்லூரியில் கருத்தரங்கம்
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் முதுநிலை, ஆராய்ச்சித் துறை சாா்பில் உயிா் அறிவியலில் முன்னேற்றங்கள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான ஜே.பால்ஜெயகா் தலைமை வகித்தாா். நாகசாகி பல்கலைக் கழக விஞ்ஞானி பி.ஏ.வெண்மதிமாறன், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் டி.ஜே.பாண்டியன், அமைப்புச் செயலா் டாலியாரூபா, இங்கிலாந்தைச் சோ்ந்த ஜேம்ஸ்கிளமென்ட், கேரள மாநிலம் ராஜீவ்காந்தி உயிரி தொழில் நுட்ப மையத்தைச் சோ்ந்த கதிரேசன், அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை நிா்வாகி ஏ. வன்னியராஜன், பெரியாா் பல்கலைக் கழக விஞ்ஞானி எஸ். லலிதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.
இந்த நிகழ்வில், வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்று தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்பித்தனா். கருத்தரங்க மலரை கல்லூரி முதல்வா் ஜே. பால் ஜெயகா் வெளியிட்டாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (செப்.30) இரண்டாம் நாள் அமா்வு நடைபெற உள்ளது.
நிதிக் காப்பாளா் பியூலாரூபிகமலம், துணை முதல்வா் சாமுவேல் அன்பு செல்வன், அமைப்புச் செயலா் ஸ்டெல்லாமேரி, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, பேராசிரியை சாய் ஷா்மிளா வரவேற்றாா். பேராசிரியா் பி. வெள்ளதுரை நன்றி கூறினாா்.