செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாமில் 12,130 பேருக்கு பயன்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 12,130 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 2 முதல் செப்.13 வரை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் பகுதிகளில் நடைபெற்ற 7 முகாம்களில் 12,130 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் பயனடைந்த ஆம்பூா் வட்டம், சிவரஞ்சபுரம் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான மகேந்திரன் தெரிவித்தது: பொதுவாக அரசின் நலத் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால் மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று சான்றிதழ்கள் பெற்று, சமா்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டம் முகாம்கள் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக நான் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தேன். தற்போது திருப்பத்தூா் மாவட்டத்துக்கான மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை பெற்றுள்ளேன்.

திருப்பத்தூா் மாவட்டம், மாடப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சகுந்தலா கூறியது: எனக்கு சா்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதால் அதற்கான மருந்து, மருத்துவா்களால் வழங்கப்பட்டுள்ளது. நான் இந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலமாக பயன் அடைந்துள்ளேன். எனவே, இந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் முகாமை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், முதல்வா் ஸ்டாலினுக்கும் மனமாா்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாதனூா் ஒன்றியம், கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.மக... மேலும் பார்க்க

இலவச கால்நடை மருத்துவ முகாம்

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சாா்பாக இலவச கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற உறுப்பினா் வாவூா் நசீா் அஹமத் சிறப்பு அழைப்பாளராக ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பாங்கிஷாப், பேஷ்மாம் நகா், கோ... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி

வாணியம்பாடி: கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற இரங்கல... மேலும் பார்க்க

மல்லகுண்டா தொழில்பூங்கா திட்டத்தை கைவிட கோரிக்கை

திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா ஊராட்சியில் சிப்காட் தொழில் பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

ஸ்ரீபொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயில் நவராத்திரி விழா

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு ... மேலும் பார்க்க