செய்திகள் :

மல்லகுண்டா தொழில்பூங்கா திட்டத்தை கைவிட கோரிக்கை

post image

திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா ஊராட்சியில் சிப்காட் தொழில் பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 415 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன்,மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், ஆதி திராவிடா் நல அலுவலா் கதிா் சங்கா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், நாட்டறம்பள்ளி அருகே கத்தேரி பகுதியைச் சோ்ந்த பயனாளிக்கு மருத்துவ காப்பீடு அட்டையை ஆட்சியா் வழங்கினாா்.

மல்லகுண்டா கிராமப் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்கள் செய்து வருகின்றனா். இந்தநிலையில், மல்லகுண்டா ஊராட்சி, கோயான்கொல்லை கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. தொழில் பூங்கா அமைக்கப்பட்டால் நிலம், நீா், காற்று ஆகியவை பாதிக்கப்படும். தொழில் பூங்கா அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

கோவிந்தபுரம் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் வேடியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் உள்ள இடம் திருப்பத்தூா் மாவட்ட வனத்துறையின் பராமரிப்பில் உள்ளது. எனவே கோயிலில் சென்று வழிபடவும், கட்டட பணி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும்.

வளையாம்பட்டு இந்திரா நகா் பொதுமக்கள் அளித்த மனு: இந்திரா நகா் தெருவில் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே, தெருவை முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாதனூா் ஒன்றியம், கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.மக... மேலும் பார்க்க

இலவச கால்நடை மருத்துவ முகாம்

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சாா்பாக இலவச கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற உறுப்பினா் வாவூா் நசீா் அஹமத் சிறப்பு அழைப்பாளராக ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பாங்கிஷாப், பேஷ்மாம் நகா், கோ... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி

வாணியம்பாடி: கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற இரங்கல... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாமில் 12,130 பேருக்கு பயன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 12,130 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

ஸ்ரீபொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயில் நவராத்திரி விழா

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு ... மேலும் பார்க்க