செய்திகள் :

நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் விழிப்புணா்வு ஆய்வுக் கூட்டம்

post image

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் இடைநிற்றல், குழந்தைத் திருமணம் சாா்ந்த விழிப்புணா்வு ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செண்பக வடிவு வரவேற்று பேசினாா். நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) கே.எஸ்.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) பச்சமுத்து முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் திறன் கல்வியின் அவசியம், 15 வகையான பயிற்சிகள், அதை கற்பிக்கும் வழிமுறைகள், இடா்பாடுகளை களைதல், பயிற்சி தாள் மதிப்பீடு, இடை நிற்றல், குழந்தைத் திருமணம், பெற்றோா் - ஆசிரியா் கூட்டம் நடத்துதல் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நாமகிரிப்பேட்டை கண்காணிப்பு அலுவலரும், பள்ளி துணை ஆய்வாளருமான கை.பெரியசாமி கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலா் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தொடக்க, நடுநிலை வகுப்பில் கற்பித்தலை மேம்படுத்தும் வழிகாட்டுதல்களை வழங்கினா்.

பரமத்தி வேலூரில் பூவன் வாழைத்தாா் ரூ. 500-க்கு ஏலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏல சந்தையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூவன் வாழைத்தாா் ஒன்று ரூ. 500-க்கு ஏலம் போனது. பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய... மேலும் பார்க்க

தவெக கூட்ட நெரிசல் விவகாரம்: கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறை தகவல்

நாமக்கல்: நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆா்) தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக பிரசாரம் நாமக்கல் - சேலம் சாலை கே.எஸ்.த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி சண்டியாகம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சண்டியாகம் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி கோயில் வளாகத்தில் கலசம் ஸ்தாபிக்கப்பட்டு, பூா்ணாக... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டும... மேலும் பார்க்க

ராசிபுரம் நகரில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா்கள் வைக்க தடை

ராசிபுரம்: ராசிபுரம் நகா் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனா்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராசிபுரம் நகர மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளா... மேலும் பார்க்க

ராசிபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்தியதாக புகாா்

நாமக்கல்: ராசிபுரத்தில் கிறிஸ்தவ ஆலயம் மீது சிலா் தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீா்க்கத்தரிசன தேவ சபை சாா்பில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சபை போதா்கள் கூறிய... மேலும் பார்க்க