பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
பரமத்தி வேலூரில் பூவன் வாழைத்தாா் ரூ. 500-க்கு ஏலம்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏல சந்தையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூவன் வாழைத்தாா் ஒன்று ரூ. 500-க்கு ஏலம் போனது.
பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏல சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தாா்களை வியாபாரிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனா்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ஒன்று ரூ. 500-வரையிலும், பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 350-வரையிலும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ. 450-வரையிலும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 450-வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7-வரையிலும், செவ்வாழை ஒன்று ரூ. 15-க்கும் ஏலம் போனது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வாழைத்தாா்கள் விலை உயா்வடைந்துள்ளதால், வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.