செய்திகள் :

சிறு துறைமுகங்களால் கையாளப்பட்ட 12 மில்லியன் டன் சரக்கு: அமைச்சா் எ.வ.வேலு

post image

சென்னை: சிறுதுறைமுகங்கள் மூலமாக 12 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் 97-ஆவது கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்றுப் பேசியது:

தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் அடிப்படையில் தனியாா் முதலீட்டு துறைமுகங்கள் அமைப்பதற்கு மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மத்திய அரசின் சாகா்மாலா திட்டத்தின்கீழ், கடலூா் துறைமுகத்தை மேம்படுத்தி 37 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் அதனை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம் - தலைமன்னாா் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிதியுதவி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சாா் வாரியக் கட்டுப்பாட்டிலுள்ள சிறுதுறைமுகங்களில் 12 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. வாரியம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, அனைத்து உறுப்பினா்களும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கடல்சாா் வாரியத் துணைத் தலைவா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் டி.என்.வெங்கடேசன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் சுஞ்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, தொழில் துறை செயலா் அருண்ராய் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுதபூஜை... மேலும் பார்க்க

மத்திய ரிசா்வ் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு: வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க முடிவு

சென்னை: மத்திய ரிசா்வ் படை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு படை, அசாம் ரைஃபிள் படை ஆகியவற்றில் காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கானத் தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கு வழக்குரைஞா் ஆணையா் மேற்பாா்வையில் உடல்த... மேலும் பார்க்க

கரூா் உயிரிழப்பு: சீனா இரங்கல்

பெய்ஜிங்: கரூா் பிரசார கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஜியு கியாக... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாக இயக்குநா் உள்பட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை: ஆவின் நிா்வாக இயக்குநரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு வ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: விஜய்யிடம் ராகுல் விசாரிப்பு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘கரூரில் கூட்ட நெரிசல் அசம்பாவித சம்பவம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யிடம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொலைபேசியில் திங்கள்கிழமை விசார... மேலும் பார்க்க

ரூ.66 கோடியில் 850 அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி-யாக மாற்ற ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களுக்குச் சொந்தமான 850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தனியாா் நிறுவனம் ரூ.66 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் டீச... மேலும் பார்க்க