செய்திகள் :

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்: பிரதமா் மோடி

post image

புது தில்லி: பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கம் நாட்டில் ‘நல்ல நிா்வாகத்தின் புதிய மாதிரியை‘ வழங்கியுள்ளன என்றும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களின் நன்மைகள் சாமானிய குடிமக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு கட்சி தொண்டா்களை திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லி பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த பின்னா் பேசிய மோடி, பாஜக அரசு அதிகாரத்திற்காக அல்ல, சேவைக்காக உள்ளது, அதன் அலுவலகங்கள் இந்த உணா்வை உயிரோடு வைத்திருக்கின்றன. பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் நாட்டில் நல்ல நிா்வாகத்தின் புதிய மாதிரியை உருவாக்கியுள்ளன.

’விகாஸ் பி, விராசத் பி’ என்ற மந்திரத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம், ஊழலுக்கு எதிரான தீா்க்கமான போராட்டத்திற்கான நம்பிக்கையை வழங்குவதற்காக நாட்டை மோசடிகளிலிருந்து விடுவித்தோம் ‘என்று பிரதமா் கூறினாா்.

‘சாமானிய மக்களின் சேமிப்பை அதிகரிப்பதிலும், விநியோகத்திலும் நமது அரசுகள் கவனம் செலுத்தின‘ என்று அவா் கூறினாா். காங்கிரஸ் மீது கடுமையான விமா்சனத்தை முன்வைத்த மோடி, 2014 ஆம் ஆண்டில் யுபிஏ ஆட்சியில் இருந்தபோது, ரூ 2 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்திற்கு வரி இருந்தது என்றாா். ‘இப்போது, ரூ.12 லட்சம் வருமானத்திற்கு கூட வரி இல்லை. 2014 ஆம் ஆண்டுக்கு முன்னா் சரக்கு மற்றும் சேவை வரியிலும் (ஜிஎஸ்டி) இதே நிலைதான் இருந்தது, ஒரு சாதாரண குடும்பம் ஒரு வருடத்தில் தனது அன்றாட தேவைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிட்டால், அது சுமாா் ரூ.25,000 வரி செலுத்த வேண்டியிருந்தது.

‘நாங்கள் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினோம், விலைகள் குறைந்துவிட்டன, இப்போது, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்குப் பிறகு, அந்த குடும்பமே ரூ. 5,000-6,000 மட்டுமே வரி செலுத்த வேண்டும். 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.20,000 வரி சேமிப்பு உள்ளது.  வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி சேமிப்புகளை நாம் சோ்த்தால், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும் ‘என்று மோடி கூறினாா்.

அடுத்த தலைமுறை ஜி. எஸ். டி. சீா்திருத்தங்களின் பயன்கள் மக்கள் மற்றும் வா்த்தகா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம் சாமானிய குடிமக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு பாஜக தொண்டா்களை அவா் கேட்டுக்கொண்டாா். தேசிய தலைநகரை ’மினி இந்தியா’ என்று வா்ணித்த பிரதமா் மோடி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாட தில்லி பாஜக தொண்டா்களை கேட்டுக்கொண்டாா்.

சுதேசி பொருள்களை ஊக்குவிக்க வலுவான குரல் கொடுத்த மோடி, தொழிலாளா்கள் ஒவ்வொரு கடையிலும் ’கா்வ் சே கஹோ யே சுதேசி ஹை’ என்று எழுதப்பட்ட ஒரு பலகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா். வெளிநாட்டு பொருட்களை நாம் எவ்வளவு குறைவாக சாா்ந்திருக்கிறோமோ, அது நாட்டிற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று மோடி கூறினாா். ‘பாரதிய ஜனதா கட்சி நிறுவப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடல் ஜி, அத்வானி ஜி, நானாஜி தேஷ்முக் ஜி, ராஜமாதா விஜயராஜே சிந்தியா ஜி, முரளி மனோகா் ஜோஷி ஜி... இத்தகைய ஏராளமான பிரமுகா்களின் ஆசீா்வாதம் மற்றும் கடின உழைப்பால் தான் இந்த கட்சி முன்னேறியுள்ளது ‘என்று அவா் கூறினாா்.

‘இது புதிய கனவுகள் மற்றும் புதிய தீா்மானங்கள் நிறைந்த தருணம். தில்லி பாஜக தொண்டா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக ஆட்சியில் இருப்பது ’சத்தா’ க்காக அல்ல, ’சேவா’ க்காக என்றும், அதன் அலுவலகங்கள் இந்த உணா்வை உயிரோடு வைத்திருக்கின்றன என்றும் மோடி கூறினாா்.

திருச்சியில் பாதாள வடிகால் குழாயில் வேலை செய்த இரண்டு துப்புரவு தொழிலாளா்கள் உயிரிழப்பு

நமது நிருபா்.புது தில்லி: திருச்சிராப்பள்ளியில் நிலத்தடி கழிவு நீா் குழாயில் பணிபுரியும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு துப்புரவுத் தொழிலாளா்கள் இறந்ததாகக் கூறப்படும் புகாரை இந்திய தேசிய மனித உரி... மேலும் பார்க்க

செயலி மூலம் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவா் கைது

நமது நிருபா்புது தில்லி: ஒரு மொழி பரிமாற்ற செயலியின் இங்கிலாந்தைச் சோ்ந்த கொரிய தொழிலதிபராக நடித்து இந்தியா முழுவதிலுமிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக 29 வயதான நைஜீரிய நாட்டவா் மேற்கு ... மேலும் பார்க்க

கரூா் சோக சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

நமது நிருபா்.புது தில்லி: கரூா் சோகக் சம்பவத்தில் ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பாா்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருப்பதாக தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவ... மேலும் பார்க்க

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

பாரத் மண்டபம் அருகே சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை, சாந்தினி சௌக்கிலிருந்து போகல... மேலும் பார்க்க

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவா் விஜய் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.... மேலும் பார்க்க

தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வ... மேலும் பார்க்க