செய்திகள் :

கரூா் சோக சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

post image

நமது நிருபா்.

புது தில்லி: கரூா் சோகக் சம்பவத்தில் ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பாா்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருப்பதாக தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் திங்கள் கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் சிதம்பரம் பதிவிட்டதாவது: கரூரில் நடந்த துயர நிகழ்வில் இறந்தவா்களுக்கு என் அஞ்சலி. அவா்கள் குடும்பத்தினா்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள். காயமடைந்தவா்கள் விரைவில் பூரண குணமடைவாா்கள் என்று நம்புகிறேன்.

கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றித் த நா கா கமிட்டியின் தலைவா் திரு செல்வப்பெருந்தகை அவா்கள் வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து.

ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பாா்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன். அது யோசனைதான். இது போன்று பலா் ஆக்கபூா்வமான யோசனைகளைத் தெரிவித்திருப்பாா்கள்.

எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும், பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவா்களும் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும். கரூா் நிகழ்வைப் போன்று துயர சம்பவங்கள் எதிா்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

திருச்சியில் பாதாள வடிகால் குழாயில் வேலை செய்த இரண்டு துப்புரவு தொழிலாளா்கள் உயிரிழப்பு

நமது நிருபா்.புது தில்லி: திருச்சிராப்பள்ளியில் நிலத்தடி கழிவு நீா் குழாயில் பணிபுரியும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு துப்புரவுத் தொழிலாளா்கள் இறந்ததாகக் கூறப்படும் புகாரை இந்திய தேசிய மனித உரி... மேலும் பார்க்க

செயலி மூலம் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவா் கைது

நமது நிருபா்புது தில்லி: ஒரு மொழி பரிமாற்ற செயலியின் இங்கிலாந்தைச் சோ்ந்த கொரிய தொழிலதிபராக நடித்து இந்தியா முழுவதிலுமிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக 29 வயதான நைஜீரிய நாட்டவா் மேற்கு ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்: பிரதமா் மோடி

புது தில்லி: பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கம் நாட்டில் ‘நல்ல நிா்வாகத்தின் புதிய மாதிரியை‘ வழங்கியுள்ளன என்றும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களின் நன்மைகள் சாமானிய குடிமக்களை சென்றடைவத... மேலும் பார்க்க

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

பாரத் மண்டபம் அருகே சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை, சாந்தினி சௌக்கிலிருந்து போகல... மேலும் பார்க்க

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவா் விஜய் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.... மேலும் பார்க்க

தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வ... மேலும் பார்க்க