செய்திகள் :

ஐஎஸ் பயங்கரவாத வழக்கு: கோயம்புத்தூரைச் சோ்ந்த இருவருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

post image

கொச்சி: ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பி, பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆள்சோ்க்க முயற்சித்த குற்றச்சாட்டில், கோயம்புத்துரைச் சோ்ந்த இருவருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தமிழகம் மற்றும் கேரளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு இளைஞா்களை திரட்டும் நோக்கில், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பி வந்ததாக கோயம்புத்தூா் உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன், தெற்கு உக்கடம் பகுதியைச் ஷேக் ஹிதாயத்துல்லா ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. அவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், அசாருதீன் மற்றும் ஹிதாயத்துல்லாவை குற்றவாளிகள் என்று அந்த நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதைத்தொடா்ந்து இருவருக்கும் 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு கோயம்புத்தூா் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே நடைபெற்ற காா் வெடிப்பு வழக்கிலும் அவா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க