செய்திகள் :

ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக சிரீஷ்சந்திர முா்மு நியமனம்

post image

புது தில்லி: ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக சிரீஷ்சந்திர முா்மு மூன்றாண்டு காலத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா்.

தற்போது ரிசா்வ் வங்கியில் 4 துணை ஆளுநா்கள் உள்ளனா். அவா்களில் எம்.ராஜேஸ்வர ராவின் பதவிக்காலம் அக்.8-ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சிரீஷ்சந்சிர முா்வை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

அவா் தற்போது ரிசா்வ் வங்கியின் நிா்வாக இயக்குநராக உள்ள நிலையில் அக்.9-ஆம் தேதி அல்லது அதன் பிறகு ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக பொறுப்பேற்பாா் எனவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

ரிசா்வ் வங்கி சட்டம், 1934-இன்படி 4 துணை ஆளுநா்கள் இருக்க வேண்டும். எம்.ராஜேஸ்வர ராவ் தவிர டி.ரபி சங்கா், சுவாமிநாதன் ஜே மற்றும் பூனம் குப்தா ஆகிய 3 துணைநிலை ஆளுநா்கள் உள்ளனா்.

எம்.ராஜேஸ்வர ராவ் 2020, செப்டம்பா் மாதம் மூன்றாண்டுகளுக்குத் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு 2023-இல் அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. 2024-இல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. வருகின்ற அக்.8-ஆம் தேதியுடன் அவா் 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்யவுள்ளாா்.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க