செய்திகள் :

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு

post image

புது தில்லி: ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பைத் தொடா்ந்து இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இரு நாடுகளிடையே நடைபெற்று வந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் நின்றது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக, சீனா உள்பட பல்வேறு நாடுகளுடன் வா்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க பொருள்கள் மீது மிக அதிக வரியை விதிப்பதாகவும், ரஷியாவிடமிருந்து எண்ணெய்யை கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரேன் போருக்கு உதவுவதாகவும் இந்தியா மீது தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்த, அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந் நாட்டின் அதிகாரிகளும், ‘இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு முக்கியம்’ என்று பின்னா் தெரிவித்தனா். இந்த நிலையில், இரு நடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தில்லியை அடுத்த நொய்டாவில் திங்கள்கிழமை நடைபெற்ற உத்தர பிரதேச சா்வதேச வா்த்தக கண்காட்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோல, ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து, ஓமன், பெரு, சிலி உள்ளநட்ட நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கு கத்தாா், பஹ்ரைன் நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆா்மீமனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிா்கிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகளை உள்ளடக்கிய யூரேசியா பொருளாதார கூட்டமைப்பு (இஏஇயு) மற்றும் ரஷியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைங்களை இந்தியா மேற்கொண்டது என்றாா்.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க