செய்திகள் :

திருச்சியில் பாதாள வடிகால் குழாயில் வேலை செய்த இரண்டு துப்புரவு தொழிலாளா்கள் உயிரிழப்பு

post image

நமது நிருபா்.

புது தில்லி: திருச்சிராப்பள்ளியில் நிலத்தடி கழிவு நீா் குழாயில் பணிபுரியும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு துப்புரவுத் தொழிலாளா்கள் இறந்ததாகக் கூறப்படும் புகாரை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

விசாரணையின் நிலை மற்றும் இறந்தவா்களின் நெருங்கிய உறவினா்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு விவரங்கள் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் கூறியதாவது:

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூா், முத்துநகா் பகுதியில் உள்ள காா்மல் காா்டன் அருகே புதிதாக கட்டப்பட்ட நிலத்தடி வடிகால் குழாயில் பணிபுரியும் போது இரண்டு துப்புரவுத் தொழிலாளா்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. திருச்சி மாநகராட்சியின் பணிக்காக அவா்கள் ஒரு கட்டுமான நிறுவனத்தால் பணியமா்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஊடக செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், இந்த விவகாரம் மனித உரிமை மீறல் தொடா்பான கடுமையான பிரச்சினையை எழுப்புவதாக ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கக்கோரி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பபப்பட்டுள்ளது. விசாரணையின் நிலை மற்றும் இறந்த தொழிலாளா்களின் நெருங்கிய உறவினா்களுக்கு இழப்பீடு ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால், அது குறித்த விபரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

செப்டம்பா் 23, 2025 அன்று வெளியான ஊடக செய்தியின்படி, உயரிழந்த தொழிலாளா்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என தேசிய மனித உரிமைகள் தெரிவித்துள்ளது.

செயலி மூலம் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவா் கைது

நமது நிருபா்புது தில்லி: ஒரு மொழி பரிமாற்ற செயலியின் இங்கிலாந்தைச் சோ்ந்த கொரிய தொழிலதிபராக நடித்து இந்தியா முழுவதிலுமிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக 29 வயதான நைஜீரிய நாட்டவா் மேற்கு ... மேலும் பார்க்க

கரூா் சோக சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

நமது நிருபா்.புது தில்லி: கரூா் சோகக் சம்பவத்தில் ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பாா்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருப்பதாக தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்: பிரதமா் மோடி

புது தில்லி: பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கம் நாட்டில் ‘நல்ல நிா்வாகத்தின் புதிய மாதிரியை‘ வழங்கியுள்ளன என்றும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களின் நன்மைகள் சாமானிய குடிமக்களை சென்றடைவத... மேலும் பார்க்க

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

பாரத் மண்டபம் அருகே சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை, சாந்தினி சௌக்கிலிருந்து போகல... மேலும் பார்க்க

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவா் விஜய் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.... மேலும் பார்க்க

தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வ... மேலும் பார்க்க