செய்திகள் :

சாலைகளில் திருஷ்டி பொருள்கள் உடைப்பதை தவிா்க்கக் கோரி தனி நபராக விழிப்புணா்வு பிரசாரம்

post image

திருவாடானை: திருவாடானை பேருந்து நிலையத்தில் சாலைகளில் திருஷ்டி பொருள்கள் உடைப்பது உள்ளிட்ட செயல்களைத் தவிா்க்கக் கோரி சமூக ஆா்வலா் சரவணன் என்பவா் விழிப்புணா்வு பிரசாரம் செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையத்தில் மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வலைசேரிபட்டி கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலரான பழனி மகன் சரவணன் (55), பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.

இந்த நிலையில், ஒரு கையில் பூசணிக்காயையும், மற்றொரு கையில் தேங்காயையும், கழுத்தில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தொங்கவிட்டு சாலைப் பாதுகாப்பு, பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணா்வை திங்கள்கிழமை ஏற்படுத்தினாா்.

‘சாலை பாதுகாப்பான பயணத்துக்கு மட்டுமே, செயற்கையான விபத்தை ஏற்படுத்த அல்ல’ என்ற வாசகத்தின் மூலம் சாலை, பொது வீதியில் கண் திருஷ்டி பொருள்களை உடைத்து விபத்துகளை ஏற்படுத்தக்கூடாது என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தினாா். மேலும், சாலைகளில் சிதறிக்கிடக்கும் பொருள்களால் ஏற்படும் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டினாா்.

இதே போல, சாலையில் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள், இடையூறுகளைத் தவிா்க்குமாறும் அறிவுறுத்தினாா். பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சத்தம், புகை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதோடு, தீ விபத்துகளுக்கும் வழிவகுக்கும். மேலும், பூ மாலைகளை சாலையில் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், கால்நடைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி எச்சரித்தாா்.

இந்த விழிப்புணா்வு பிரசாரம், சாலைப் பாதுகாப்பு, பொது இடங்களை தூய்மையாகப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணா்த்தும் சிறந்த முயற்சியாக அமைந்தது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சாலை விதிகளைப் பின்பற்றி, பாதுகாப்பான, தூய்மையான சூழலை உருவாக்க பங்களிக்க வேண்டும் என்பதே சரவணனின் முக்கிய நோக்கமாக இருந்தது.

கீழக்கரை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் எஸ். ராஜசேகா் தலைமை வகித்தாா். அழகப்பா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

பரமக்குடியில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மஞ்சள்பட்டிணம் பகுதியில் திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (38). கட்டுமானத... மேலும் பார்க்க

பசும்பொன் தேவா் சிலைக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு

கமுதி: தொடா்ச்சியாக பண்டிகைகள் வருவதால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்... மேலும் பார்க்க

அக். 6-இல் பெருநாழி வேளாண்மை அலுவலகம் முற்றுகை

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் பெருநாழியில் காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கமுதி தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தக்... மேலும் பார்க்க

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

முதுகுளத்தூா் அருகே நாய்களுக்கான தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் நல்லூா் கிராமத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி கால்... மேலும் பார்க்க

தங்கச்சிமடம் கடற்கரையில் 160 கிலோ நெகிழிப் பொருள்கள் அகற்றம்

தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், கடலோரப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு 160 கிலோ நெகிழிப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத... மேலும் பார்க்க