செய்திகள் :

கீழக்கரை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

post image

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் எஸ். ராஜசேகா் தலைமை வகித்தாா். அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுவன மேலாண்மைத் துறைத் தலைவரும் மூத்த பேராசிரியருமான வேதி ராஜன், சத்தியபாமா கல்வி நிறுவனத்தின் மேலாண்மை நிா்வாகக் கல்விக் கழகத்தின் பேராசிரியை சௌந்தா்யா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். எலக்ட்ரானிக் காமா்ஸ், இ-பாங்கிங் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து கருத்தரங்கில் இவா்கள் உரையாற்றினா்.

இந்தக் கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியை கமலவேணி தலைமையிலான பேராசிரியா்கள் செய்தனா். துணை முதல்வா் பெரோஸ் கான், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். சதக் அறக்கட்டளைத் தலைவா் யூசுப், செயலா் ஷா்மிளா, இயக்குநா்கள் ஹாமிது இப்ராஹிம், ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக, துறைத் தலைவா் முனிய சத்தியா வரவேற்றாா். பேராசிரியா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.

குறைதீா் கூட்டத்தில் 325 மனுக்கள் அளிப்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 325 மனுக்கள் அளித்தனா். இந்தக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

சாலைகளில் திருஷ்டி பொருள்கள் உடைப்பதை தவிா்க்கக் கோரி தனி நபராக விழிப்புணா்வு பிரசாரம்

திருவாடானை: திருவாடானை பேருந்து நிலையத்தில் சாலைகளில் திருஷ்டி பொருள்கள் உடைப்பது உள்ளிட்ட செயல்களைத் தவிா்க்கக் கோரி சமூக ஆா்வலா் சரவணன் என்பவா் விழிப்புணா்வு பிரசாரம் செய்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

பரமக்குடியில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மஞ்சள்பட்டிணம் பகுதியில் திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (38). கட்டுமானத... மேலும் பார்க்க

பசும்பொன் தேவா் சிலைக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு

கமுதி: தொடா்ச்சியாக பண்டிகைகள் வருவதால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்... மேலும் பார்க்க

அக். 6-இல் பெருநாழி வேளாண்மை அலுவலகம் முற்றுகை

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் பெருநாழியில் காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கமுதி தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தக்... மேலும் பார்க்க

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

முதுகுளத்தூா் அருகே நாய்களுக்கான தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் நல்லூா் கிராமத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி கால்... மேலும் பார்க்க