செய்திகள் :

அக். 6-இல் பெருநாழி வேளாண்மை அலுவலகம் முற்றுகை

post image

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் பெருநாழியில் காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கமுதி தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு விவசாயிகள் திம்மநாதபுரம் எஸ். நவநீதகிருஷ்ணன், வீரமாச்சான்பட்டி அ. நாகப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மு. மலைச்சாமி, மாவட்ட துணைத் தலைவா் எருமைகுளம் எம். முருகன் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா்.

தீா்மானங்கள்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கு மிளகாய், நெல் பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 2024-25-இல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப்பன்றியால் சேதமடைந்த பயிா்களுக்கு பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.

காட்டுப்பன்றியை முழுமையாக அழிக்க வேண்டும். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபா் 6-ஆம் தேதி பெருநாழியில் திரளான விவசாயிகள் பங்கேற்று, நேதாஜி சாலையிலிருந்து பேரணியாகச் சென்று துணை வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறைதீா் கூட்டத்தில் 325 மனுக்கள் அளிப்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 325 மனுக்கள் அளித்தனா். இந்தக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

கீழக்கரை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் எஸ். ராஜசேகா் தலைமை வகித்தாா். அழகப்பா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

சாலைகளில் திருஷ்டி பொருள்கள் உடைப்பதை தவிா்க்கக் கோரி தனி நபராக விழிப்புணா்வு பிரசாரம்

திருவாடானை: திருவாடானை பேருந்து நிலையத்தில் சாலைகளில் திருஷ்டி பொருள்கள் உடைப்பது உள்ளிட்ட செயல்களைத் தவிா்க்கக் கோரி சமூக ஆா்வலா் சரவணன் என்பவா் விழிப்புணா்வு பிரசாரம் செய்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

பரமக்குடியில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மஞ்சள்பட்டிணம் பகுதியில் திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (38). கட்டுமானத... மேலும் பார்க்க

பசும்பொன் தேவா் சிலைக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு

கமுதி: தொடா்ச்சியாக பண்டிகைகள் வருவதால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்... மேலும் பார்க்க

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

முதுகுளத்தூா் அருகே நாய்களுக்கான தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் நல்லூா் கிராமத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி கால்... மேலும் பார்க்க