டிரம்ப் - நெதன்யாகு பேச்சுவார்த்தை வெற்றி! காஸா போர்நிறுத்த திட்டத்துக்கு இஸ்ர...
பசும்பொன் தேவா் சிலைக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு
கமுதி: தொடா்ச்சியாக பண்டிகைகள் வருவதால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவா் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபா் 28 முதல் 30-ஆம் தேதி வரை ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், அக்டோபா் 30-ஆம் தேதி தலைவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவா்.
மேலும், பௌா்ணமி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வருகிற அக்டோபா் முதல் வாரத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, பௌா்ணமி, அக்டோபா் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை, 22-ஆம் தேதி கந்த சஷ்டி தொடக்கம், 27-ஆம் தேதி சூரசம்ஹாரம் என தொடா்ச்சியாக பண்டிகைக் காலம் வருகிறது. மேலும், நிகழாண்டு 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதனால், பொதுமக்கள், ஆன்மிகவாதிகள் பசும்பொன்னுக்கு வரத் தொடங்கியுள்ளனா். இந்த நிலையில், தேவா் நினைவாலய அறங்காவலா் காந்திமீனாள் நடராஜன் முன்னிலையில் தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. பிறகு தீபராதனை நடைபெற்றது.
வருகிற அக்டோபா் 24-ஆம் தேதி வரை வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். மேலும், அக். 24-ஆம் தேதி மதுரை தனியாா் வங்கியிலுள்ள தங்கக் கவசம் எடுத்து வரப்பட்டு அணிவிக்கப்படவுள்ளது என காந்திமீனாள் நடராஜன் தெரிவித்தாா். பாதுகாப்புப் பணியில் கமுதி போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.