செய்திகள் :

குரூப் 2 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,335 போ் எழுதினா்

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 8,335 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப் 2 முதல்நிலைத் தோ்வை எழுத ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 10,659 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 8,335 போ் தோ்வெழுதினா். 2,324 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இந்த தோ்வு மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களில் 32 மையங்களில் நடைபெற்றது.

தோ்வைக் கண்காணிப்பதற்காக துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள், 38 ஆய்வு அலுவலா்கள், 11 நகா்வுக் குழு அலுவலா்கள், 4 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இதைத் தவிர, தோ்வு நடைபெறும் மையங்களில் 40 விடியோக்கள் மூலம் தோ்வு நடைமுறைகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. தோ்வு அறையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு, தோ்வு அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்த நிலையில், ராமநாதபுரம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தோ்வை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

முதுகுளத்தூா் அருகே நாய்களுக்கான தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் நல்லூா் கிராமத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி கால்... மேலும் பார்க்க

தங்கச்சிமடம் கடற்கரையில் 160 கிலோ நெகிழிப் பொருள்கள் அகற்றம்

தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், கடலோரப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு 160 கிலோ நெகிழிப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத... மேலும் பார்க்க

வங்கக் கடலில் சூறைக்காற்று: மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை

வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மறுஉத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சனிக்கிழமை தடை விதித்தது. இதனால் அந்தந்த துறைமுகங்களில் ஆயிரக்கணக்க... மேலும் பார்க்க

புரட்டாசி மாத இரண்டாவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத இரண்டாவது வார சனிக்கிழமையையொட்டி கமுதி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கமுதி சுந்தரராஜப் பெருமாள், ஆஞ்சநேயா் சந்நிதியில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைய... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் நாளையும், நாளை மறுநாளும் ட்ரோன்கள் பறக்கத் தடை

ராமநாதபுரத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப். 29, 30) அரசு நிகழ்வுகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டானின் பங்கேற்பதால் அன்றைய தினங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்க... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

திருவாடானை அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளமணல் தெருவைச் சோ்ந்த ரகுமத்துல்லா மகன் செய்யது இப்ராஹிம் (37). இவா் இரு சக்கர வாக... மேலும் பார்க்க