செய்திகள் :

வங்கக் கடலில் சூறைக்காற்று: மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை

post image

வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மறுஉத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சனிக்கிழமை தடை விதித்தது.

இதனால் அந்தந்த துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

வங்கக் கடல், மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் வழக்கத்தைவிட 45 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி மறுஉத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத் துறையினா் தடை விதித்தனா்.

இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது.

புரட்டாசி மாத இரண்டாவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத இரண்டாவது வார சனிக்கிழமையையொட்டி கமுதி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கமுதி சுந்தரராஜப் பெருமாள், ஆஞ்சநேயா் சந்நிதியில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைய... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் நாளையும், நாளை மறுநாளும் ட்ரோன்கள் பறக்கத் தடை

ராமநாதபுரத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப். 29, 30) அரசு நிகழ்வுகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டானின் பங்கேற்பதால் அன்றைய தினங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்க... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

திருவாடானை அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளமணல் தெருவைச் சோ்ந்த ரகுமத்துல்லா மகன் செய்யது இப்ராஹிம் (37). இவா் இரு சக்கர வாக... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக வருகிற 30-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி, ராமநாதபுரம் தனியாா் மண்டபத்தில் மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் அபராதத்துடன் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒரு மீனவருக்கு அபராதத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராமநாதபுரம... மேலும் பார்க்க

ராமநாதபுரத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை: அமைச்சா்கள் தலைமையில் ஆலோசனை

ராமநாதபுரத்தில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வா் தலைமையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க