செய்திகள் :

வருகிற பேரவைத் தோ்தலில் திமுக - நாதக இடையேதான் போட்டி: சீமான்

post image

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுகவுக்கும் நாதகவுக்கும் இடையேதான் போட்டி என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவாக பாஜக நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது. விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறை தயக்கம் காட்டுவதைப் பாா்க்கும்போது திமுக, தவெக இடையே ரகசியத் தொடா்பு இருக்கலாம் என்ற திருமாவளவனின் சந்தேகம் உண்மையாகக்கூட இருக்கலாம்.

கரூரில் நடைபெற்ற சம்பவத்துக்கு பொறுப்பேற்க முடியாது, எல்லாவற்றுக்கும் அரசுதான் காரணம் என விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்துக்கு விஜய் முதலில் பொறுப்பேற்க வேண்டும். சம்பவ இடத்துக்கு முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உடனடியாக ஏன் வந்தாா் என்பது கேள்வி அல்ல. விஜய் ஏன் செல்லவில்லை என்பதுதான் கேள்வி.

கரூரில் இந்த இடம் ஏன் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை வழக்கில் கொலை செய்தவா் யாா் என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் 2 மாதங்களில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய முதல்வா் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தாா்?

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் நாம் தமிழா் கட்சிக்கும் இடையேதான் போட்டி என்றாா் அவா்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள... மேலும் பார்க்க

விஜயதசமி: பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

விஜயதசமி விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.விஜயதசமி தினத்தில் எந்த ஒரு புதிய செயலையும் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். அதேபோன்று, ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.மதுரை சதாசிவம் நகா் நக்கீரா் தெருவைச் சோ்ந்த முருகதாஸ் மகன் விகாஸ் (19). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளுக்கு அபராதம்

மதுரையில் தடையை மீறி வியாழக்கிழமை திறக்கப்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்... மேலும் பார்க்க

மருத்துவமனையில் சிறைவாசி உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சிறைவாசி புதன்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சோ்ந்த அப்புசாமி மகன் ராஜமாணிக்கம் (59). இவா் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வீட்டுமனை இல்லாத ஏழைக... மேலும் பார்க்க