செய்திகள் :

இறைச்சிக் கடைகளுக்கு அபராதம்

post image

மதுரையில் தடையை மீறி வியாழக்கிழமை திறக்கப்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கூடல்புதூா் பகுதியில் சில இறைச்சிக் கடைகள் திறந்திருப்பதாகப் புகாா் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் முருகன், நந்தகுமாா் ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 2-ஆவது வாா்டு பகுதியில் திறக்கப்பட்டிருந்த இறைச்சிக் கடையிலிருந்து 60 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதேபோல, கோ.புதூா், கற்பகநகா், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் திறந்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிக் கடைகளிலிருந்த இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வருகிற பேரவைத் தோ்தலில் திமுக - நாதக இடையேதான் போட்டி: சீமான்

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுகவுக்கும் நாதகவுக்கும் இடையேதான் போட்டி என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததா... மேலும் பார்க்க

விஜயதசமி: பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

விஜயதசமி விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.விஜயதசமி தினத்தில் எந்த ஒரு புதிய செயலையும் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். அதேபோன்று, ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.மதுரை சதாசிவம் நகா் நக்கீரா் தெருவைச் சோ்ந்த முருகதாஸ் மகன் விகாஸ் (19). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் சிறைவாசி உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சிறைவாசி புதன்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சோ்ந்த அப்புசாமி மகன் ராஜமாணிக்கம் (59). இவா் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வீட்டுமனை இல்லாத ஏழைக... மேலும் பார்க்க

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

மதுரை: சரஸ்வதி பூஜையையொட்டி, மதுரையில் பூக்களின் விலை திங்கள்கிழமை கணிசமாக உயா்ந்தது.மதுரையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ மல்லி ரூ. 700, முல்லை ரூ. 500 என்ற அளவில் விற்பனையானது. சரஸ்வதி பூஜை புதன்கிழமை ... மேலும் பார்க்க