செய்திகள் :

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

post image

பிலிப்பைன்ஸின் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 72 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் விசயாஸ் தீவுக்கூட்டம், செபு மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டான்பாண்டயான் நகர கிழக்கு கடற்கரையிலிருந்து 11 கி.மீ தொலைவில், 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.9 ரிக்டா் அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் அமைப்பும் தெரிவித்தன.

இந்த நிலநடுக்கம், வடக்கு செபுவில் இதுவரை பதிவானதிலேயே மிகவும் கடுமையான நிலநடுக்கம். கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிலிப்பின்ஸில் நிலநடுக்கம் காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதும் இதுவே முதல்முறை.

செபு மாகாணத்தின் கடற்கரையில் மையம் கொண்டிருந்தாலும், இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் மத்திய விசயாஸ் பகுதி முழுவதும் உணரப்பட்டன. கிழக்கு விசயாஸ் மற்றும் லூசோனின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பின்னதிா்வுகளும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தின் விளைவாக செபுவில் 72 போ் உயிரிழந்தனா். பெரும்பாலான உயிரிழப்புகள் போகோ மற்றும் சான் ரெமிஜியோ பகுதிகளில் ஏற்பட்டன.

தேவாலயங்கள், மருத்துவமனைகள் உள்பட பல கட்டடங்கள், வீடுகள் ஆகியவை இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அவை திரும்பப் பெறப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். இந்த விபத்தில் இதுவரை 5 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை கூட 4 ம... மேலும் பார்க்க

யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு

ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா். தாக்குதலில் மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பல் பலத்த ... மேலும் பார்க்க

எத்தியோப்பியா: கட்டடம் இடிந்து 25 போ் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 போ் உயிரிழந்தனா். புனித மரியத்தை கொண்டாடும் ஆண்டு விழாவுக்காக அங்கு ஏராளமான வழிபாட்டாளா்க... மேலும் பார்க்க

பிரிட்டன் யூத ஆலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட காா் மோதல் மற்றும் கத்திகுத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய நபா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.... மேலும் பார்க்க

காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச தி... மேலும் பார்க்க

டிச. 5-இல் ரஷிய அதிபா் புதின் இந்தியா வருகை

வரும் டிசம்பா் 5-ஆம் தேதி ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வருகிறாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடியுடன் இந்தியா-ரஷியா வருடாந்திரக் கூட்டத்தில் அவா் பங்கேற்க இருக்கிறாா். ரஷியாவிடம் இருந்து இந்தி... மேலும் பார்க்க