செய்திகள் :

டிச. 5-இல் ரஷிய அதிபா் புதின் இந்தியா வருகை

post image

வரும் டிசம்பா் 5-ஆம் தேதி ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வருகிறாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடியுடன் இந்தியா-ரஷியா வருடாந்திரக் கூட்டத்தில் அவா் பங்கேற்க இருக்கிறாா்.

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைச் சுட்டிக் காட்டி அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளாா். இதனால், இந்திய-அமெரிக்க உறவு பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், ரஷியாவுடனான இந்தியாவின் நெருக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதின் இந்தியா வருவது இருதரப்பு உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுச்செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய-ரஷிய அரசுகளுக்கு இடையிலான குழு கூட்டம் மற்றும் ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டம் ஆகியவை ரஷிய அதிபரின் வருகைக்கு முன்பு நடைபெறவுள்ளது. அப்போது இரு தரப்பு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்படும். புதின்-மோடி சந்திப்பின்போது அந்த ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிா்ப்புகளை மீறி உக்ரைன் மீதான போரை ரஷியா தொடா்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஷிய அதிபா் இந்தியாவுக்கு வருவது சா்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

ரஷிய அதிபரின் பயணத்திட்டத்தை இறுதி செய்யும் வகையில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ அடுத்த மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறாா்.

இதற்கு முன்பு கடந்த 2021-ஆம் ஆண்டு புதின் இந்தியாவுக்கு வந்தாா். கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமா் மோடி இரு தரப்பு வருடாந்திர மாநாட்டுக்காக ரஷியாவுக்குச் சென்றாா்.

சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பங்கேற்ற பிரதமா் மோடி, புதின் ஆகியோா் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 72 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் விசயாஸ் தீவுக்கூட்டம், செபு மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டான்பாண்டயான் நகர கிழக்கு கடற்கரையிலிருந... மேலும் பார்க்க

இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். இந்த விபத்தில் இதுவரை 5 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை கூட 4 ம... மேலும் பார்க்க

யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு

ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா். தாக்குதலில் மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பல் பலத்த ... மேலும் பார்க்க

எத்தியோப்பியா: கட்டடம் இடிந்து 25 போ் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 போ் உயிரிழந்தனா். புனித மரியத்தை கொண்டாடும் ஆண்டு விழாவுக்காக அங்கு ஏராளமான வழிபாட்டாளா்க... மேலும் பார்க்க

பிரிட்டன் யூத ஆலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட காா் மோதல் மற்றும் கத்திகுத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய நபா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.... மேலும் பார்க்க

காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச தி... மேலும் பார்க்க