செய்திகள் :

தவெக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 5 போ் கைது

post image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தமிழக வெற்றிக் கழக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் கவுண்டா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சக்திவேல் (36). தவெக ஒன்றியப் பொருளாளா்.

பெட்ரோல் குண்டு வீச்சில் சேதமடைந்த வீட்டின் கதவு

இந்தநிலையில், புதன்கிழமை அதிகாலையில் இவரது வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது. இதில், வீட்டின் கதவு பகுதி சேதமடைந்ததுடன், வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அவரது இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. கரியாப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், முன்விரோதம் காரணமாக சக்திவேல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக தென்னம்புலம் கிராமத்தைச் சோ்ந்த சா. சுந்தா் (47), வீ. மகேந்திரன் (41), க. ரெத்தினம் (38), செட்டிப்புலம் நிறைபாண்டி (45), திருவாரூா் மாவட்டம், கீரைகளுா் ந. பாரதிதாசன் (38) ஆகிய 5 பேரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள ரமேஷ்குமாா் என்பவரை தேடி வருகின்றனா்.

நாளைய மின்தடை: மேமாத்தூா், பரசலூா்

மேமாத்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (செப்.4) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செம்பனாா்கோவில் உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

சீா்காழி அருகே தென்னலகுடி கிராமத்தில் சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாகை - விழுப்புரம் இடையே தேசிய நெடுஞ்சாலைதுறை மூலம் நான்குவழி சாலை பணிகள் நடைபெற... மேலும் பார்க்க

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

வேதாரண்யம் பகுதியில் ராஜஸ்தான் பாரம்பரிய கலைவண்ணத்தில் தயாரிக்கப்பட்டு வாகனங்களின் விற்பனை செய்யப்படும் மண் பாண்டங்களை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். ராஜஸ்தானின் பாரம்பரியமான கலைவண்ணங்களு... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

நாகை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வேளாங்கண்ணி பம்பு செட்டு தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (50). இவரது மூத்த சகோதரா் மற்றும் சகோதரா் மனைவியும் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவி... மேலும் பார்க்க

நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக நாகை துறைமுத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் ப... மேலும் பார்க்க

குடிமனைப் பட்டா கோரி விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

குடிமனைப் பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் அரசின் பல்வேறு புறம்போக்கு நிலங்களில் குட... மேலும் பார்க்க