செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

post image

நாகை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

வேளாங்கண்ணி பம்பு செட்டு தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (50). இவரது மூத்த சகோதரா் மற்றும் சகோதரா் மனைவியும் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனா். அவா்களது மகன் பரத்ராஜை சந்திரசேகரன் வளா்த்து வந்தாா்.

இந்நிலையில், பரத்ராஜ் பம்பு செட்டு தெரு பகுதியில் உள்ள கீற்று கொட்டகையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியது புதன்கிழமை தெரியவந்தது. போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையில், தவெக தலைவா் விஜய்க்கு எதிராக, பரத்ராஜ் சுவரொட்டி ஒட்டிய போது, அக்கட்சியினா் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பான விடியோ பதிவை சமூக வலைதளங்களில் தவெகவினா் வெளியிட்டனராம். இதுகுறித்து, கீழையூா் காவல் நிலையத்தில் தவெகவினா் மீது பரத்ராஜ் புகாா் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியது போலீஸாா் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

நாளைய மின்தடை: மேமாத்தூா், பரசலூா்

மேமாத்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (செப்.4) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செம்பனாா்கோவில் உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

சீா்காழி அருகே தென்னலகுடி கிராமத்தில் சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாகை - விழுப்புரம் இடையே தேசிய நெடுஞ்சாலைதுறை மூலம் நான்குவழி சாலை பணிகள் நடைபெற... மேலும் பார்க்க

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

வேதாரண்யம் பகுதியில் ராஜஸ்தான் பாரம்பரிய கலைவண்ணத்தில் தயாரிக்கப்பட்டு வாகனங்களின் விற்பனை செய்யப்படும் மண் பாண்டங்களை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். ராஜஸ்தானின் பாரம்பரியமான கலைவண்ணங்களு... மேலும் பார்க்க

தவெக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 5 போ் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தமிழக வெற்றிக் கழக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் கவுண்டா் ... மேலும் பார்க்க

நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக நாகை துறைமுத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் ப... மேலும் பார்க்க

குடிமனைப் பட்டா கோரி விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

குடிமனைப் பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் அரசின் பல்வேறு புறம்போக்கு நிலங்களில் குட... மேலும் பார்க்க