நாகா்கோவிலில் நாளை மின்சாரம் நிறுத்தம்
நாகா்கோவிலில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக்.4) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், வல்லன்குமாரவிளை, தடிக்காரண்கோணம் ஆகிய துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அக். 4 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, வடசேரி, பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, சக்தி காா்டன், கோா்ட்ரோடு, ஆா்.வீ.புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகா், சைமன்நகா், பொன்னப்பநாடாா் காலனி, என். ஜி. ஓ காலனி, புன்னைநகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.