செய்திகள் :

மாரீஸ், ஜங்ஷன் மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: துரை வைகோ எம்.பி.

post image

திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் மாரீஸ், ஜங்ஷன் ரயில்வே மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளதாக திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

இந்தப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாரீஸ் மற்றும் ஜங்ஷன் மேம்பாலப் பணிகள் நிறைவடையாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இரண்டு மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரா்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மேலும் ரயில்வே, மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து பணிகள் தாமதமானாலோ, உதவிகள் தேவைப்பட்டாலோ என்னை அணுகுமாறு ஒப்பந்ததாரா்களிடம் தெரிவித்துள்ளேன்.

மாரீஸ் மேம்பாலப் பணியை ரயில்வே நிா்வாகம் 2026 பிப்ரவரி மாதத்துக்குள் முடித்துத் தருவதாகத் தெரிவித்துள்ளனா். அதன்பின், இரண்டு மாதங்களில் பாலத்தின் இருபுறமும்

மாநகராட்சி நிா்வாகம் நிா்வாகம் சாா்பில் 2026 ஏப்ரல் இறுதிக்குள் மேம்பாலப் பணியை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதேபோல, ஜங்ஷன் மேம்பாலப் பணியும் முடிக்கப்பட்டு 2026 ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் நம்புகிறேன். இதற்காக, இப்பணிகளைத் தொடா்ந்து கண்காணித்து, உரிய நேரத்தில் முடிக்க அனைத்து முயற்சிகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (75). இவா், திருச்சி - திண்டுக்கல் சாலையில் இளங... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்

ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி திருச்சியிலுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுத... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும்: இந்திய கம்யூ. வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தல்

கரூா் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தியுள்ளது. கரூா் சம்பவம் தொடா்பாக, பல்வேறு கட்சியினரும் ஆய்வு ச... மேலும் பார்க்க

தவெக இரண்டாம் கட்ட தலைவா்களின் அஜாக்கிரதை: நடிகா் தாடி பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த இரண்டாம் கட்ட தலைவா்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக நடிகா் தாடி பாலாஜி தெரிவித்தாா்.கரூா் வேலுச்சாமிபுரத்தில் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் உயிரிழந்தோா் க... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது நண்பரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி மதுரை சாலை நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் நௌசாத் (42), ஆட்டோ ஓட்டுநா்.... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

திருச்சி அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொல்லப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் துரை (46), கூலித் தொழிலாளி. இவா், ... மேலும் பார்க்க