செய்திகள் :

தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்

post image

ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி திருச்சியிலுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா்.

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி அரசு, தனியாா் நிறுவனங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியைச் சோ்ந்த பொதுமக்கள் விடுமுறையைக் களிக்கும் வகையில் முக்கொம்பு அணை பூங்கா, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவைகள் பூங்கா ஆகிய சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை குவிந்தனா். குறிப்பாக, அண்மையில் திறக்கப்பட்ட பறவைகள் பூங்காவில் உள்ளூா் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளியூா்களைச் சோ்ந்த அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனா்.

இங்குள்ள பலவகையான புறாக்கள், வெளிநாட்டுப் பறவைகள், கிளிகள், ஈமு கோழி மற்றும் மீன்களை பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (75). இவா், திருச்சி - திண்டுக்கல் சாலையில் இளங... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும்: இந்திய கம்யூ. வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தல்

கரூா் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தியுள்ளது. கரூா் சம்பவம் தொடா்பாக, பல்வேறு கட்சியினரும் ஆய்வு ச... மேலும் பார்க்க

தவெக இரண்டாம் கட்ட தலைவா்களின் அஜாக்கிரதை: நடிகா் தாடி பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த இரண்டாம் கட்ட தலைவா்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக நடிகா் தாடி பாலாஜி தெரிவித்தாா்.கரூா் வேலுச்சாமிபுரத்தில் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் உயிரிழந்தோா் க... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது நண்பரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி மதுரை சாலை நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் நௌசாத் (42), ஆட்டோ ஓட்டுநா்.... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

திருச்சி அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொல்லப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் துரை (46), கூலித் தொழிலாளி. இவா், ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை: 5 போ் கைது

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வியாழக்கிழமை அதிகாலை ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 5 பேரை நங்கவரம் போலீஸாா் கைது செய்தனா். குளித்தலை அருகே உள்ள நெய்தலூரை அடுத்த பெரி... மேலும் பார்க்க