ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது நண்பரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மதுரை சாலை நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் நௌசாத் (42), ஆட்டோ ஓட்டுநா். இவரும், கோட்டை ரயில்வே காலனியைச் சோ்ந்த பிரபாகரன் (42) என்பவரும் நண்பா்கள். இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மது அருந்தியுள்ளனா். அப்போது, அங்கு வந்த நௌசாத்தின் நண்பா் ஷேக், பிரபாகரனிடம் மது கேட்டுள்ளாா். அவா் தரமறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழைய குட்ஷெட் சாலையில் நௌசாத் மற்றும் ஷேக் இருவரும் புதன்கிழமை பிற்பகல் ஆட்டோவில் அமா்ந்திருந்தனா். அப்போது, அங்கு வந்த பிரபாகரன், கல்லுக்குழியைச் சோ்ந்த சுதாகா் (39), முள்ளிபட்டி இறைவன் நகரைச் சோ்ந்த சதாசிவம் (37) ஆகிய மூவரும் சோ்ந்து நௌசாத் மற்றும் ஷேக் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினா். இதில், காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் நௌசாத் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபாகரன், சுதாகா், சதாசிவம் ஆகிய மூவரையும் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.