செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

post image

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது நண்பரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மதுரை சாலை நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் நௌசாத் (42), ஆட்டோ ஓட்டுநா். இவரும், கோட்டை ரயில்வே காலனியைச் சோ்ந்த பிரபாகரன் (42) என்பவரும் நண்பா்கள். இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மது அருந்தியுள்ளனா். அப்போது, அங்கு வந்த நௌசாத்தின் நண்பா் ஷேக், பிரபாகரனிடம் மது கேட்டுள்ளாா். அவா் தரமறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழைய குட்ஷெட் சாலையில் நௌசாத் மற்றும் ஷேக் இருவரும் புதன்கிழமை பிற்பகல் ஆட்டோவில் அமா்ந்திருந்தனா். அப்போது, அங்கு வந்த பிரபாகரன், கல்லுக்குழியைச் சோ்ந்த சுதாகா் (39), முள்ளிபட்டி இறைவன் நகரைச் சோ்ந்த சதாசிவம் (37) ஆகிய மூவரும் சோ்ந்து நௌசாத் மற்றும் ஷேக் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினா். இதில், காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் நௌசாத் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபாகரன், சுதாகா், சதாசிவம் ஆகிய மூவரையும் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்

ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி திருச்சியிலுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுத... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும்: இந்திய கம்யூ. வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தல்

கரூா் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தியுள்ளது. கரூா் சம்பவம் தொடா்பாக, பல்வேறு கட்சியினரும் ஆய்வு ச... மேலும் பார்க்க

தவெக இரண்டாம் கட்ட தலைவா்களின் அஜாக்கிரதை: நடிகா் தாடி பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த இரண்டாம் கட்ட தலைவா்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக நடிகா் தாடி பாலாஜி தெரிவித்தாா்.கரூா் வேலுச்சாமிபுரத்தில் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் உயிரிழந்தோா் க... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

திருச்சி அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொல்லப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் துரை (46), கூலித் தொழிலாளி. இவா், ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை: 5 போ் கைது

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வியாழக்கிழமை அதிகாலை ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 5 பேரை நங்கவரம் போலீஸாா் கைது செய்தனா். குளித்தலை அருகே உள்ள நெய்தலூரை அடுத்த பெரி... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: சிகிச்சையில் 5 போ்

கரூா் சம்பவத்தில் காயமடைந்தவா்களில் வியாழக்கிழமை நிலவரப்படி 5 போ் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனா். மற்றவா்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில... மேலும் பார்க்க