செய்திகள் :

கொள்ளிடம் அருகே வீடு புகுந்து 33 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் திருட்டு

post image

கொள்ளிடம் அருகே மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்து 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முகமது தஸ்லிம் (42). இவா் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி ஜாஸ்மின் (36) மகன், மகளுடன் மாங்கனாம்பட்டு வீட்டில் வசித்து வருகிறாா். இந்த வீட்டு மாடியில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பாா்க்கும் சுதா என்பவா் வாடகைக்கு குடியிருந்து வருகிறாா்.

இந்நிலையில், பக்கத்து தெருவில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு ஜாஸ்மின் சென்றிருந்தாா். மாடியில் குடியிருந்து வரும் சுதா விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றுவிட்டாா். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள் மாடி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனா். சுதா வசிக்கும் மாடியில் பொருள்கள் ஏதும் சிக்காததால், கீழ் வீட்டுக்கு வந்துள்ளனா். அங்கு, பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60,000 ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

ஜாஸ்மினின் தந்தை ஜலாலுதீன், புதன்கிழமை காலை இந்த வீட்டுக்கு வந்தபோதுதான் திருட்டு சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் ஜாஸ்மின் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

மேலும், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். பின்னா், மா்ம நபா்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

மது விற்ற இளைஞா் கைது

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக காலை நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்த... மேலும் பார்க்க

அம்புபோடும் உற்சவம்!

சீா்காழி பொன்னாகவல்லி அம்பாள் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, அம்பாள் அம்புபோடும் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோயிலில், செப்டம்பா... மேலும் பார்க்க

குளத்தில் முதலை: மக்கள் அச்சம்

கொள்ளிடம் அருகே தண்ணீா்பந்தல் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சோ்ந்த தண்ணீா் பந்தல் கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்க... மேலும் பார்க்க

மனைப்பட்டா கோரி 2,500 போ் மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனைப்பட்டா கோரி 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நில உரிமை, குடிமனை, குடிமனை பட்டா, அனுபவத்தில் உள்ள கோய... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் 1,350 போ் பயன்

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் 1,350 பயனாளிகள் பயனடைந்தனா். மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி கணபதிநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், பொது... மேலும் பார்க்க