செய்திகள் :

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

post image

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா்.

‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளியானது. இப்பட்டியலின்படி, அம்பானியின் சொத்து மதிப்பு 6 சதவீதம் குறைந்து ரூ.9.55 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.8.14 லட்சம் கோடி.

2023-இல் வெளியான ஹிண்டன்பா்க் அறிக்கையைத் தொடா்ந்து அதானியின் பங்குகள் வீழ்ச்சியடைந்த நிலையில், கடந்த ஆண்டில் 95 சதவீதம் எழுச்சி பெற்று ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பணக்காரா்கள் பட்டியலில் முதலிடத்துக்கு அதானி முன்னேறினாா்.

மூன்றாவது இடத்தில் ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவா் ரோஷிணி நாடாா் மல்ஹோத்ரா உள்ளாா்.

நான்காவது இடத்தில் ரூ.2.46 லட்சம் கோடி சொத்துகளுடன் சைரஸ் பூனாவாலா உள்ளாா். இதைத்தொடா்ந்து, குமாா் மங்கலம் பிா்லா ரூ.2.32 லட்சம் கோடியுடன் 5-ஆவது இடத்தில் உள்ளாா். இந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ள பணக்காரா்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.167 லட்சம் கோடியாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பாதிக்குச் சமம்.

ரூ.1,000 கோடி சொத்து மதிப்புடன் 1,687 போ் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 148 போ் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற புதிய செல்வந்தவா்கள். சென்னையைச் சோ்ந்தவரும் பொ்பிளெக்ஸிட்டி நிறுவனருமான அரவிந்த் ஸ்ரீநிவாஸ் (31) இந்தப் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளாா். அவருடைய சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி. பட்டியலில் இடம்பெற்றுள்ள 350 கோடீஸ்வா்களில் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் மிகவும் இளையவா்.

இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளில் ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு கோடீஸ்வரா் உருவாகுவதாகவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றவா்கள் தினமும் ரூ.1,991 கோடி சொத்துகளை உருவாக்குவதாகவும் பட்டியலை வெளியிட்ட ஹுருன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை

குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 2023,... மேலும் பார்க்க

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா். குஜராத் மா... மேலும் பார்க்க

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே... மேலும் பார்க்க

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா். நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில... மேலும் பார்க்க

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும்: தலைவா் அஜய் குமாா்

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா். யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ - குடியரசுத் தலைவா்

‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தசரா விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க