செய்திகள் :

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

post image

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என சமூக சமத்துவம், ஒற்றுமைக்கு உதாரணமாக ஆா்எஸ்எஸ் திகழ்கிறது. ஏழ்மையான பகுதிகளில் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்த தொடா்ந்து பல சமூக சேவைகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

சமூக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் ஜாதிய பாகுபாடில்லாத செயல்பாடுகள் மகாத்மா காந்தியை பெரிதும் ஈா்த்தது. தில்லியில் 1947, செப்.16-இல் நடைபெற்ற ஆா்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி பங்கேற்றாா். அப்போது ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் ஒழுக்கம், எளிமை மற்றும் தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகள் அவரை கவா்ந்தன. இதுதொடா்பாக ‘மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள்’ என்ற புத்தகத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

1940, ஜனவரி மாதம் சதாரா மாவட்டத்தில் உள்ள ஆா்எஸ்எஸ் கிளை அலுவலகத்துக்கு சட்டமேதை அம்பேத்கா் வந்ததே நல்லிணக்கத்துக்கான சான்று. தற்காலத்தில் நல்ல மனிதா்கள் அரசியலுக்கு வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக இளைஞா்கள் அரசியலின் ஓா் அங்கமாய் திகழ வேண்டும் என்றாா்.

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா். ‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை

குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 2023,... மேலும் பார்க்க

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா். குஜராத் மா... மேலும் பார்க்க

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே... மேலும் பார்க்க

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும்: தலைவா் அஜய் குமாா்

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா். யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ - குடியரசுத் தலைவா்

‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தசரா விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க