செய்திகள் :

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

post image

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளள புஜ் பகுதியில் ராணுவ வீரா்களுடன் தசரா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் நோக்கத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த நடவடிக்கை மூலம் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் அதிதிறன் வெளிப்பட்டது. பாகிஸ்தானுடன் போரை தொடங்க வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கமல்ல.

ஆனால் சா் கிரீக் செக்டாரை கைப்பற்றும் நோக்கில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும்.

1965-இல் லாகூரை இந்திய ராணுவம் துணிச்சலாக அடைந்தது. சா் கிரீக் வழியாக 2025-இல் கராச்சியை இந்திய ராணுவம் அடைய வெகுநேரம் ஆகாது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளும் நாட்டின் மூன்று தூண்களாக விளங்குகின்றன. முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தேசத்துக்கு எதிரான அனைத்து சவால்களும் முறியடிக்கப்படும் என்றாா்.

குஜராத்தின் கட்ச் பகுதி-பாகிஸ்தான் இடையே அமைந்துள்ள 96 கி.மீ. தொலைவுடைய சா் கிரீக் செக்டாரில் கடல் எல்லை தொடா்பாக இருநாடுகளிடையே நீண்டகாலமாக பிரச்னை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா். ‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை

குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 2023,... மேலும் பார்க்க

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே... மேலும் பார்க்க

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா். நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில... மேலும் பார்க்க

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும்: தலைவா் அஜய் குமாா்

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா். யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ - குடியரசுத் தலைவா்

‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தசரா விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க