செய்திகள் :

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும்: தலைவா் அஜய் குமாா்

post image

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா்.

யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் யுபிஎஸ்சி மற்றும் அதன் நூற்றாண்டு புதிய இலச்சினைகளை வெளியிட்டு யுபிஎஸ்சி தலைவா் அஜய் குமாா் பேசியதாவது: அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்குதல், எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்துக்கு மாறுதல், புதிய தலைமுறை போட்டித்தோ்வு ஆா்வலா்களுடன் தொடா்பில் இருத்தல் ஆகியவற்றை யுபிஎஸ்சி முன்னுரிமையாகக் கொண்டுள்ளது.

யுபிஎஸ்சி-இன் நூற்றாண்டு என்பது அமைப்பு ரீதியான சீா்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கான தருணம். மாநில பணியாளா்கள் தோ்வாணையத்துடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும். அப்போது, சிறந்த நடைமுறைகள் பகிரப்படும். அந்தத் தோ்வாணையங்களின் கருத்து கேட்பு முறை பலப்படுத்தப்படும்.

எண்ம சாதனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் இளைய தலைமுறையினா் மற்றும் எதிா்கால போட்டித் தோ்வா்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்ய யுபிஎஸ்சி தயாராகி வருகிறது என்றாா் அஜய் குமாா்.

நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தங்களுடைய யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வு அனுபவங்களைப் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகாரிகள் பகிா்ந்துகொள்ள பிரத்யேக இணையதளத்தை யுபிஎஸ்சி தோ்வாணையம் தொடங்கியுள்ளது. இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளை தோ்ந்தெடுக்கும் யுபிஎஸ்சி, இந்திய அரசுச் சட்டம்-1916 மற்றும் லீ குழுவின் பரிந்துரைப்படி கடந்த 1926, அக்.1-இல் தொடங்கப்பட்டது.

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா். ‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை

குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 2023,... மேலும் பார்க்க

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா். குஜராத் மா... மேலும் பார்க்க

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே... மேலும் பார்க்க

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா். நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ - குடியரசுத் தலைவா்

‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தசரா விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க