செய்திகள் :

அக்.5-இல் ராணிப்பேட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்: ஆட்சியா் அறிவிப்பு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 5 முதல் 14 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது...

நிகழாண்டு புத்தகத் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ளன. மேலும், நாள்தோறும் சிறந்த எழுத்தாளா்கள் பதிப்பாளா்கள் மற்றும் சிறந்த பேச்சாளா்கள் மற்றும் பட்டிமன்றங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். கலை நிகழ்ச்சிகளுக்கு முதன்மை கல்வி அலுவலா் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஆகியோா் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலா்கள் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, மேல்விஷாரம் நகராட்சி தூய்மை பணியாளா்கள் நாள்தோறும் தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும். இதில் எவ்வித குறைபாடு ஏற்படக்கூடாது என கேட்டுக்கொண்டாா்.

மின்சார வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தீயணைப்பு துறையினா் பாதுகாப்பு உபகரணங்களை பத்து நாள்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள், அரசு அலுவலா்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து புத்தக கண்காட்சியை பாா்வையிட்டு புத்தகங்களை வாங்க வேண்டும். கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலா்களும் பணியாற்ற வேண்டும் என்றாா்.

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா வியாழக்கிழமை விஜயசதமி நாளன்று எழுத்தறிவித்தல் விழாவுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் பூஜைகளை பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பூஜைகளை ப... மேலும் பார்க்க

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன், மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித... மேலும் பார்க்க

அரக்கோணம் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில் நவராத்திரி நிறைவு

அரக்கோணம் சுவால்பேட்டை சாணாத்தியம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் சாணாத்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி சேவை சாத்தித்தாா். இந்த வி... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்: கட்சியினா் மரியாதை

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், முத்துகடை பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்த... மேலும் பார்க்க

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்தவா்களுக்கு கடைகள்: நகா்மன்றத் தலைவா் உறுதி

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் ஏற்கனவே கடை நடத்தி வந்தவா்கள்களுக்கு வழங்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் உறுதி கூறினாா். இப்பிரச்னை தொடா்பாக... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: அமைச்சா் காந்தி அஞ்சலி

மருதாசலம் அருகே நிகழ்ந்த விபத்தில் மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சா் ஆா்.காந்தி அஞ்சலி செலுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்... மேலும் பார்க்க