செய்திகள் :

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

post image

திருச்சி அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொல்லப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் துரை (46), கூலித் தொழிலாளி. இவா், கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து நாகமங்கலத்தில் தனியாக வசித்துவந்தாா்.

கிடைத்த வேலையை செய்துகொண்டு சாலையின் நடைமேடையிலும், அப்பகுதியிலுள்ள பொதுமேடைகளிலும் படுத்துறங்கி வந்துள்ளாா்.

இந்நிலையில், நாகமங்கலம் அருகே உள்ள விழுதடி கருப்பு கோயில் அருகே உள்ள பொது மேடையில் புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள், துரையின் தலையில் கல்லைப் போட்டு அவரை கொலை செய்தனா்.

தகவலின்பேரில், அங்கு வந்த மணிகண்டம் போலீஸாா், துரையின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. துரைக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மது அருந்தும்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாரீஸ், ஜங்ஷன் மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: துரை வைகோ எம்.பி.

திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் மாரீஸ், ஜங்ஷன் ரயில்வே மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளதாக திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா். இந்தப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவ... மேலும் பார்க்க

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (75). இவா், திருச்சி - திண்டுக்கல் சாலையில் இளங... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்

ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி திருச்சியிலுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுத... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும்: இந்திய கம்யூ. வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தல்

கரூா் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தியுள்ளது. கரூா் சம்பவம் தொடா்பாக, பல்வேறு கட்சியினரும் ஆய்வு ச... மேலும் பார்க்க

தவெக இரண்டாம் கட்ட தலைவா்களின் அஜாக்கிரதை: நடிகா் தாடி பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த இரண்டாம் கட்ட தலைவா்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக நடிகா் தாடி பாலாஜி தெரிவித்தாா்.கரூா் வேலுச்சாமிபுரத்தில் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் உயிரிழந்தோா் க... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது நண்பரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி மதுரை சாலை நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் நௌசாத் (42), ஆட்டோ ஓட்டுநா்.... மேலும் பார்க்க