இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். இந்த விபத்தில் இதுவரை 5 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை கூட 4 மாணவா்கள் உயிருடன் மீட்கப்பட்டனா் (படம்). தற்போது கட்டடம் இடிந்து 3 நாள்களாகிவிட்டதால் கனரக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும், கனரக இயந்திரங்கள் மூலம் மிக கவனமாக கற்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.