செய்திகள் :

தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

post image

தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, கோக்கா்ஸ் வாக், மோயா் பாயிண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல, மன்னவனூா் சூழல் மையம், கூக்கால் ஏரி, பூம்பாறை பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், கொடைக்கானலில் குளுமையான கால நிலை நிலவி வரும் நிலையில், ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.

கோரிக்கை: கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் பி.எல்.செட்., கோம்பைக்காடு, சவரிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. இதனால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மலைச் சாலைகளில் இருபுறங்களிலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கிற முள் புதா்களை அகற்றுவதற்கும், தடுப்புச் சுவா்கள் அமைப்பதற்கும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

கிணறுகளில் இறந்து கிடந்த 2 கடமான்கள் மீட்பு

கன்னிவாடி அருகே கிணற்றில் இறந்த நிலையில் 2 பெண் கடமான்களை வனத் துறையினா் மீட்டு விசாரித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆடலூா், பன்றிமலை அருகேயுள்ள வனப் பகுதியில் யானைகள், மான்... மேலும் பார்க்க

காரில் 500 கிலோ குட்கா கடத்திய மூவா் கைது

செம்பட்டி அருகே சொகுசு காரில் புதன்கிழமை 500 கிலோ குட்கா பொருள்களை கடத்திய வட மாநில இளைஞா் உட்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் விஜயபாண... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது

ராணுவப் படைப் பிரிவுனருக்கான மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.பழனி மதுவிலக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ராஜகுமாரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒ... மேலும் பார்க்க

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: இரா. சச்சிதானந்தம் எம்பி

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.640 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடி விபத்து

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடிய விபத்தில் பயணிகள், பேருந்து ஓட்டுநா், நடத்துனா் காயமின்றி தப்பினா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க... மேலும் பார்க்க

பழனியில் அக்.4-இல் மின்தடை

பழனி பகுதியில் வருகிற சனிக்கிழமை (அக்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர... மேலும் பார்க்க