செய்திகள் :

ஆதார் கட்டணங்கள் உயர்வு; எந்தெந்த மாற்றங்களுக்கு எவ்வளவு கட்டணம்? - முழுப் பட்டியல்

post image

ஆதார் அட்டை வாங்கும்போது இருந்த அதே முகவரியிலேயே, நாம் இப்போது இருக்க மாட்டோம், அல்லது நமது ஆதார் அட்டையில் ஏதாவது மாற்றங்கள் இருக்கலாம்.

இவைகளை UIDAI வலைதளத்திலேயோ அல்லது உதவி மையங்களுக்கோ சென்று சரி செய்துகொள்ளலாம். அதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்.

UIDAI வலைதளத்தில் சில மாற்றங்களுக்கு மட்டுமே கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆனால், உதவி மையத்திற்கு சென்று செய்யும் அனைத்து மாற்றங்களுக்கும் கட்டணங்கள் உண்டு.

வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது 2028-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும்.

ஆதார்
ஆதார்

மாற்றங்கள்!

இதுவரை ரூ.50-க்கு செய்யப்பட்ட மாற்றங்களின் கட்டணம் தற்போது ரூ.75-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.75-க்கு செய்யப்பட்டு வந்த மாற்றங்கள் ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

100-க்கு செய்யப்பட்டு வந்த மாற்றங்கள் ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.125-க்கு செய்யப்பட்ட மாற்றங்களின் கட்டணம் தற்போது ரூ.150-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

எதற்கு-எவ்வளவு?

குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் விண்ணப்பிப்பதும், அவர்களது 5 - 7 வயது மற்றும் 15 - 17 வயதுகளில் செய்யப்படும் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டுகள் முற்றிலும் இலவசம்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

இந்த வயதுக்கு மேல் உள்ளவர்கள்;

பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், இ-மெயில் ஐடி போன்ற மாற்றங்களை செய்ய ரூ.75 வசூலிக்கப்படும்.

ஆதாரில் அடையாள சான்று, முகவரி சான்று அப்டேட் செய்ய ரூ.75 வசூலிக்கப்படும்.

7 - 14 வயது மற்றும் 17 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செய்யும் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டிற்கு ரூ.125 வசூலிக்கப்படும்.

பயோமெட்ரிக் அப்டேட் செய்பவர்களுக்கு ரூ.125 வசூலிக்கப்படும்.

ஆதார் அட்டையை டவுன்லோடு செய்து பிரிண்ட் செய்ய ரூ.40 வசூலிக்கப்படும்.

``முதல் சாட்சி விஜய்தான், நீதி கிடைக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும்'' - பாஜக

விஜய்யின் கரூர் பிரசாரம்கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கார் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி, 32 பேர் படுகாயம்; பின்னணி என்ன?

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் (Frontier Corps - FC) தலைமையகம் அருகே இன்று (செப் 30) கோர கார் வெடிகுண்டு விபத்து நடந்திருக்கிறது.காரில் வெடிகுண்டுகளை நிரப்பி வைத்து வெட... மேலும் பார்க்க

விருதுநகர்: நடைபெறாத செப்டம்பர் மாதத்திற்கான நகராட்சி கூட்டம்; அடிப்படை வசதிகளுக்குச் சிக்கல்

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.இதேபோல் குழாய்கள் பழுது நீக்கும் ... மேலும் பார்க்க

கரூர் பெருந்துயரம்: "யாரும் இதை விரும்ப மாட்டார்கள்; வதந்திகளை பரப்ப வேண்டாம்" - முதல்வர் ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த துயர சம்பவம் க... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede: நெஞ்சை உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் | Photo Album

TVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vija... மேலும் பார்க்க

கரூர்: ``திடீர் மின்தடை, குறுக்கே ஆம்புலன்ஸ், இருட்டில் தடுமாறி விழுந்தனர்" - பாதிக்கப்பட்ட நபர்

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள... மேலும் பார்க்க