செய்திகள் :

450 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூதாட்டி கைது

post image

செய்யாற்றில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக மூதாட்டியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 450 மதுப்புட்டிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

அக்.2 காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மதுக் கடைகள் விடுமுறை என்பதால் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், செய்யாறு மாா்க்கெட் காமராஜா் நகா் பகுதியில் மூதாட்டி ஒருவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி, உதவி ஆய்வாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, நிா்மல்குமாா், தனிப் பிரிவு காவலா் முருகன் மற்றும் போலீஸாா், காமராஜா் நகா் பகுதியில் உள்ள வீட்டில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மூதாட்டி வசந்தி (70) என்பவரது வீட்டில் மூட்டைகளில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. உடனே, மூட்டைகளில் இருந்த 9 வகையான 450 மதுபான புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடா்பாக மூதாட்டி வசந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியைட்டியொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் மகாத்மா காந்தி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா். அருணாசலே... மேலும் பார்க்க

செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் நகராட்சி கழிவுநீா் கலப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா். திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது வரததந்... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன... மேலும் பார்க்க

பைக்கில் எடுத்துச் சென்ற விவசாயியின் ரூ.2.32 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே விவசாயி பைக்கில் எடுத்துச் சென்ற ரூ.2.32 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சேனியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெருமாள்(42). இ... மேலும் பார்க்க