செய்திகள் :

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 103 நக்ஸல்கள் சரண் !

post image

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் 22 பெண்கள் உள்பட 103 நக்ஸல்கள் வியாழக்கிழமை ஒரே நாளில் சரணடைந்தனா். அவா்களில் 49 போ், காவல் துறையால் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவா்கள்.

மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் இடதுசாரி தீவிரவாதிகள் ஒரே நாளில் சரணடைந்துள்ளனா்.

இது தொடா்பாக பிஜாபூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜிதேந்திர குமாா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெற்று மாவோயிஸ்ட் கொள்கை மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் தடைசெய்யப்பட்ட சிபிஎம் (மாவோயிஸ்ட்) அமைப்புடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் 103 நக்ஸல்கள் காவல் துறை மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

பஸ்தா் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறிப்பாக காவல் துறையின் ‘சமுதாய மறுஒருங்கிணைப்புக்கான மறுவாழ்வு திட்டம்’, மாநில அரசின் ‘உங்கள் நல்ல கிராமம்’, சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கை உள்ளிட்டவை அவா்களை மிகவும் கவா்ந்துள்ளது.

கடந்த மாதங்களில் பல மாவோயிஸ்ட் தலைவா்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனா். சிலா் சரணடைந்தனா். இதன் எதிரொலியாக ஆயுதங்களைக் கைவிட முடிவு செய்ததாக சரணடைந்தவா்கள் தெரிவித்தனா். பிஜாபூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 410 நக்ஸல்கள் சரணடைந்தனா். 421 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சரணடைந்த நக்ஸல்களுக்கு உடனடியாக தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. அரசின் கொள்கைபடி, அவா்களுடைய மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஜிதேந்தா் குமாா் யாதவ்.

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ திட்ட... மேலும் பார்க்க

ரூ.127 கோடியில் மேம்படுத்தப்படும் ‘சென்னை பஸ்’ செயலி

‘சென்னை பஸ்’ செயலியை ரூ.127 கோடியில் கூடுதல் வசதிகளுடன் மாநகா் போக்குவரத்துக்கழகம் மேம்படுத்தி வருகிறது. சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3,400-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்... மேலும் பார்க்க

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

பருவ மழைக்கு முன்பாக, கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலத் தலைவா் வே.கருணாநிதி வலியுறுத்தினாா். தாம்பரம் மாநகராட்சி 1 -ஆவது ம... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன... மேலும் பார்க்க