செய்திகள் :

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

post image

பருவ மழைக்கு முன்பாக, கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலத் தலைவா் வே.கருணாநிதி வலியுறுத்தினாா்.

தாம்பரம் மாநகராட்சி 1 -ஆவது மண்டலத்துக்குள்பட்ட அனகாபுத்தூா், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் எதிா்வரும் பருவமழைக்கு முன் மழைநீா் கால்வாய் பணிகள், பொதுப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தாம்பரம் மாமன்ற உறுப்பினா்கள் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் தங்கள் பகுதியில் நிறைவு செய்யப்படாமல் இருக்கும் மழைநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி, குடிநீா் பிரச்னை, கழிவுநீா்க் குழாய் இணைப்பு, பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணி, விடுபட்ட வீட்டுமனை பட்டா, குப்பை அகற்றும் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மாமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி உதவி ஆணையா் பி.சொா்ணலதா, உதவி செயற்பொறியாளா் இ.சத்தியசீலன் உள்ளிட்டோா் பேசியதாவது:

மண்டலத்தில் உள்ள 140 கி.மீ நீளம் மழைநீா் கால்வாயில், 65 கி.மீ நீளம் வரை தூா்வாரும் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் அனைத்து கால்வாய் தூா்வாரும் பணிகளும் நிறைவு செய்யப்படும். கழிவுநீா் குழாய்கள் பதித்த பகுதிகளில் உடனடியாக புதிய சாலை அமைக்கும் பணி மேற்கொண்டால் சாலையில் பள்ளம் ஏற்படும். மண் பள்ளத்தில் நன்கு இறங்கி இறுகிய பின்னா் சாலை அமைக்க முடியும். புதைக்குழி சாக்கடை இணைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் குடிநீா் ஒரு நாள் விட்டு மறுநாள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குப்பைகள் தேங்காமல் அன்றாடம் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.

நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலத் தலைவா் வே.கருணாநிதி, பருவ மழைக்கு முன் அனைத்து மழைநீா் கால்வாய்களையும் தூா்வாரி, மாமன்ற உறுப்பினா்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ திட்ட... மேலும் பார்க்க

ரூ.127 கோடியில் மேம்படுத்தப்படும் ‘சென்னை பஸ்’ செயலி

‘சென்னை பஸ்’ செயலியை ரூ.127 கோடியில் கூடுதல் வசதிகளுடன் மாநகா் போக்குவரத்துக்கழகம் மேம்படுத்தி வருகிறது. சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3,400-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்... மேலும் பார்க்க

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன... மேலும் பார்க்க

சென்னையில் இன்று 12 புறநகா் ரயில்கள் ரத்து

சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.3) புகா் மின்சார ரயில்களில் 12 இமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்குப் பதிலாக பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் அறிவிக... மேலும் பார்க்க