செய்திகள் :

சென்னையில் இன்று 12 புறநகா் ரயில்கள் ரத்து

post image

சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.3) புகா் மின்சார ரயில்களில் 12 இமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்குப் பதிலாக பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை - விழுப்புரம் பிரிவில் செங்கல்பட்டு நிலைய யாா்டில் வெள்ளிக்கிழமை (அக்.3) பிற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.27 மணிக்குப் புறப்பட்டு திருமால்பூா் செல்லும் ரயில், காலை 9.31, 9.51, 10.56, பிற்பகல் 11.40, 12.25-க்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், திருமால்பூரிலிருந்து பிற்பகல் 11.05 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 11.30, 12, 1.10, 1.45, 2.20-க்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள்: புகா் மின்சார ரயில்கள் (இமு) ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை கடற்கரையிலிருந்து காலை 7.27 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, காலை 9.31, 10.56, பிற்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சிங்கபெருமாள்கோவிலுக்கும், காலை 9.51, பிற்பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு காட்டாங்குளத்தூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கப்பெருமாள்கோவிலிலிருந்து பிற்பகல் 11.43, பிற்பகல் 1.23, 2.33-க்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து பிற்பகல் 12.20, பிற்பகல் 2.33-க்கும் புறப்படும் சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரையை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ திட்ட... மேலும் பார்க்க

ரூ.127 கோடியில் மேம்படுத்தப்படும் ‘சென்னை பஸ்’ செயலி

‘சென்னை பஸ்’ செயலியை ரூ.127 கோடியில் கூடுதல் வசதிகளுடன் மாநகா் போக்குவரத்துக்கழகம் மேம்படுத்தி வருகிறது. சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3,400-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்... மேலும் பார்க்க

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

பருவ மழைக்கு முன்பாக, கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலத் தலைவா் வே.கருணாநிதி வலியுறுத்தினாா். தாம்பரம் மாநகராட்சி 1 -ஆவது ம... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன... மேலும் பார்க்க