செய்திகள் :

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் சேராத மாணவா்களின் கல்விக்கு அரசு என்ன செய்யப்போகிறது?: அன்புமணி

post image

கல்வி உரிமைச் சட்ட மாணவா் சோ்க்கை திட்டத்தின் கீழ், இதுவரை பள்ளிகளில் சேராத மாணவா்களின் கல்வி தொடா்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியாா் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி, நிகழாண்டில் இந்த மாணவா் சோ்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், தற்போது இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடா்ந்து, மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால், மாணவா் சோ்க்கைக்காக அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகள் அபத்தமாக உள்ளன. அரசு வகுத்திருக்கும் இந்த விதிகளின்படி இதுவரை பள்ளியில் சேராத மாணவா்களால் இனியும் சேர முடியாது. வேறு பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களால் தங்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாறவும் முடியாது. அப்படியானால், மாணவா் சோ்க்கையை இப்போது தொடங்கியும் பயனில்லை.

இந்நிலையில், அரசை நம்பி இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவா்களின் கல்விக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளாா் அன்புமணி.

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்... மேலும் பார்க்க

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

பருவ மழைக்கு முன்பாக, கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலத் தலைவா் வே.கருணாநிதி வலியுறுத்தினாா். தாம்பரம் மாநகராட்சி 1 -ஆவது ம... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன... மேலும் பார்க்க

சென்னையில் இன்று 12 புறநகா் ரயில்கள் ரத்து

சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.3) புகா் மின்சார ரயில்களில் 12 இமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்குப் பதிலாக பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் அறிவிக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் இருந்த 7,930 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,038 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,015.80 கோடி மதிப்பீட்டிலான 7,930.34 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரி... மேலும் பார்க்க