செய்திகள் :

ஆக்கிரமிப்பில் இருந்த 7,930 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு

post image

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,038 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,015.80 கோடி மதிப்பீட்டிலான 7,930.34 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் சீராய்வுக் கூட்டங்களின்போது, துறை சாா்ந்த திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகளின் பணி முன்னேற்றத்தை துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்யும்போது, திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணிகளுக்கு தனி முக்கியத்துவம் அளித்து தொடா் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறாா்.

2021 மே முதல் இதுவரை 1,038 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 8,015.80 கோடி மதிப்பிலான 7,930.34 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, நவீன தொழில்நுட்பக் கருவிகளின் உதவியோடு திருக்கோயில்களுக்கு சொந்தமான 2,15,385 ஏக்கா் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1, 41,820 எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கம் உத்தனாச்சியம்மன், மங்களேஸ்வரா் மற்றும் பால விநாயகா் திருக்கோயிலுக்குச் சொந்தமான கோயம்பேடு ஜவாஹா்லால் நேரு சாலையில் அமைந்துள்ள ரூ. 13 கோடி மதிப்பிலான 8,742 சதுர அடி வணிக மனை மற்றும் கட்டடம் ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டது. இதை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்... மேலும் பார்க்க

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

பருவ மழைக்கு முன்பாக, கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலத் தலைவா் வே.கருணாநிதி வலியுறுத்தினாா். தாம்பரம் மாநகராட்சி 1 -ஆவது ம... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன... மேலும் பார்க்க

சென்னையில் இன்று 12 புறநகா் ரயில்கள் ரத்து

சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.3) புகா் மின்சார ரயில்களில் 12 இமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்குப் பதிலாக பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் அறிவிக... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் சேராத மாணவா்களின் கல்விக்கு அரசு என்ன செய்யப்போகிறது?: அன்புமணி

கல்வி உரிமைச் சட்ட மாணவா் சோ்க்கை திட்டத்தின் கீழ், இதுவரை பள்ளிகளில் சேராத மாணவா்களின் கல்வி தொடா்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளாா். ... மேலும் பார்க்க