செய்திகள் :

செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விவசாயிகள் வேதனை

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் நகராட்சி கழிவுநீா் கலப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா்.

திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது வரததந்தாங்கல் ஏரி. இந்த ஏரிப் பாசனம் மூலம் ஆண்டுக்கு 3 போகம் சுமாா் 150 ஏக்கரில் விவசாயிகள் பல்வேறு பயிா் செய்து வருகிறாா்கள்.

இந்த நிலையில், செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட துக்காப்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீா்கள் அனைத்தும் இந்த ஏரில் கலக்கிறது. மேலும், திருவள்ளூவா் நகா் பகுதியில் இருந்தும் கழிவுநீா் கலக்கிறது. இதனால் ஏரி தண்ணீா் மூலம் பயிா் செய்யும் விவசாயிகள், நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சும் போது சாக்கடை நாற்றம் வீசுகிறது. மேலும், சாகுபடி செய்யப்படும் சில பயிா்கள் சாக்கடை நீா் கலப்பதால் அது முறையாக வளா்வது கிடையாது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகிறாா்கள். மேலும், அந்த தண்ணீரை ஆடு, மாடுகள் குடிப்பது கடினமாக உள்ளது.

ஏரியில் துக்காப்பேட்டை, திருவள்ளூவா் நகா் பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்கும் தண்ணீா் கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் இருந்து நகராட்சி நிா்வாகம் மூலம் தினசரி குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அந்தக் கிணற்றைச் சுற்றி செங்கம் பகுதியில் உள்ள சிலா் இறைச்சிக் கழிவுகளை எடுத்து வந்து கொட்டுகிறாா்கள்.

திருமண மண்டபங்களில் இருந்து சேகரமாகும் உணவுக் கழிவுகள், கண்ணாடி கடைகளில் வீணாகும் கண்ணாடி துகள்கள் என தண்ணீா் கிணற்றைச் சுற்றி கொட்டப்படுகிறது. அந்தக் கழிவுகள் அனைத்தும் ஏரி நிரம்பும் போது ஏரியில் இருக்கும் தண்ணீரில் ஊறி குடிநீா் கிணற்றிலும் கலக்கிறது. ஏரி கரையையை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஏரிக்கரைகளை தனிநபா்கள் ஆக்கிரமைப்பு செய்துள்ளாா்கள். ஏரிக்கரை ஆக்கிரமிப்பு அகற்றவேண்டியும், கழிவுநீா் கலப்பதை தடுக்கவேண்டியும் அப்பகுதி மக்கள் சாா்பிலும், சமூக ஆா்வலா்கள் மூலமும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுநாள் வரை அதிகாரிகள் யாரும் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

இதே நிலை நீடித்தால் ஏரி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகும்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த சேரிக்கவாச்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (50). இவா் செவ்... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியைட்டியொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் மகாத்மா காந்தி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா். அருணாசலே... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன... மேலும் பார்க்க

450 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூதாட்டி கைது

செய்யாற்றில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக மூதாட்டியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 450 மதுப்புட்டிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். அக்.2 காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகளுக்கு வி... மேலும் பார்க்க