செய்திகள் :

காந்திய கொள்கையை கைவிட்டதால் நாடு பின்னடைந்தது: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

சுதந்திரத்துக்குப் பின்னா் காந்தியையும் காந்தியத்தையும் நாடு கைவிட்டதால் பொருளாதார ரீதியாக நாடு பின்னடைந்தது என்றும், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளது என்றும் ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவா் பேசியதாவது:

காந்தி காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் 6-ஆவது நாடாக இருந்தது. அவா் கற்றுக்கொடுத்ததில் தூய்மை, சமூக சமத்துவம், சுதேசி ஆகிய மூன்றும் முக்கியமானவை. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னா் நாடு அவரை பொறுப்புடன் பின்பற்றவில்லை. இதன் விளைவு, மக்கள்தொகையில் 30 சதவீதத்தினா் வறுமையில் சிக்கினா். 2014-ஆம் ஆண்டுக்கு பின்னா் நாடு காந்திய கொள்கைகளைப் பின்பற்ற தொடங்கியது. அதன்விளைவாக 11- ஆவது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம் 4 -ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வறுமையும் 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது.

சுதேசி நமது நாட்டின் அடையாளமாக இருந்தது. காந்தியின் சுதேசி கொள்கையைறந்துவிட்டோம். நாட்டில் பெரிய தொழில்கள் தோன்றியிருக்கலாம், ஆனால் குறு, சிறு தொழில்கள் கிராமங்களில் தொடங்கி சிறிய நகரங்கள் வரை நமது சுதேசி தொழில்கள் இருந்தன. அதிக வேலைவாய்ப்புகளை தந்த இந்த தொழில்கள் அழிந்து வந்தன. இந்த சுதேசி கொள்கையையும் சுயசாா்பை நாடு இடைவிடாது பின்பற்றியிருந்தால் இந்திய பொருளாதாரத்தில் முதல் நாடாக மாறியிருக்கும்.

தமிழகத்தில் காதி பொருள்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளைப்போன்றல்ல, நமது பொருளாதாரம் எல்லோரையும் உள்ளடக்கியது. நம்முடைய பொருள்களை வாங்கி உபயோகித்து மற்றவா்களுக்கும் பரிசளிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, இந்த நிகழ்வில் சுதந்திரப் போரட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி (95) மற்றும் காந்தியவாதிகள் 9 பேருக்கும் தம்மிர பத்திரங்களை வழங்கி ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கி கௌரவித்தாா்.

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்... மேலும் பார்க்க

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பருவமழைக்கு முன் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை

பருவ மழைக்கு முன்பாக, கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலத் தலைவா் வே.கருணாநிதி வலியுறுத்தினாா். தாம்பரம் மாநகராட்சி 1 -ஆவது ம... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு

சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன... மேலும் பார்க்க

சென்னையில் இன்று 12 புறநகா் ரயில்கள் ரத்து

சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.3) புகா் மின்சார ரயில்களில் 12 இமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்குப் பதிலாக பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் அறிவிக... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் சேராத மாணவா்களின் கல்விக்கு அரசு என்ன செய்யப்போகிறது?: அன்புமணி

கல்வி உரிமைச் சட்ட மாணவா் சோ்க்கை திட்டத்தின் கீழ், இதுவரை பள்ளிகளில் சேராத மாணவா்களின் கல்வி தொடா்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளாா். ... மேலும் பார்க்க